நட்பாகத் தொடர்பவர்கள்

Festivals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Festivals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

DIWALI GREETINGS!.....தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!....


அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம்!.

இந்த வருட தீபாவளி தினத்தில், நம் அனைவர் மனதிலும் சந்தோஷமும் நிம்மதியும் நிறைய‌, இறைவனை பிரார்த்திக்கிறேன்!... 

அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

தீபாவளி குறித்த முந்தைய பதிவுகளுக்கு கீழே சொடுக்கவும்...

சனி, 11 அக்டோபர், 2014

KARWA CHAUTH., KARAKA CHATHURTHI VRATH..(11.10.2014) PART 2....காரக சதுர்த்தி விரதம் (கர்வா சௌத்)...பகுதி 2.


சென்ற பதிவின் தொடர்ச்சி..

விரதக் கதை:

பல்வேறு விரதக் கதைகள் கர்வா சௌத் குறித்துச் சொல்லப்படுகின்றன. சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம்.

KARWA CHAUTH., KARAKA CHATHURTHI VRATH..(11.10.2014) PART 1.....காரக சதுர்த்தி விரதம் (கர்வா சௌத்)...பகுதி 1.


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!...

விரதப் பதிவுகள் போட்டு கொஞ்சம் நாளானதால், இன்னிக்கு ஒரு விரதப் பதிவு!.. நாம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விரதங்கள், அவற்றின் வழிமுறைகள், கதைகள் எனப் பார்த்து வருகிறோம் இல்லையா.. அந்த வரிசையில், இன்று கொண்டாடப்படும் ஒரு விரதம் பற்றி பார்க்கலாம்.. வழக்கமாக இந்தி திரைப்படங்கள், தொடர்கள் பார்ப்பவர்களுக்கு இந்த விரதம் பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும்..  பெண்கள், மாலை வேளையில் சந்திரனை, மாவு சலிக்கும் சல்லடையால் நோக்கி வணங்கும் காட்சி பெரும்பாலனவற்றில் இடம் பெற்றிருக்கும். அந்த விரதம் தான் நாம் இன்று காணப் போவது..' காரக சதுர்த்தி விரதம்' என்றும் சொல்லப்படும் இது 'கர்வா சௌத்' என்று வடமாநிலங்களில் பிரபலமாக வழங்கப்படுகின்றது..

திங்கள், 6 அக்டோபர், 2014

SONG # 8...THAYUMANAVADIGAL ARULIYA ..'MALAIVALAR KAATHALI'...பாடல் # 8.... தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'...


பாடல் # 8.

பூதமொடு பழகிவள ரிந்திரிய மாம்பேய்கள்
    புந்திமுத லானபேய்கள்
  போராடு கோபாதி ராட்சசப் பேய்களென்
    போதத்தை யூடழித்து
வேதனை வளர்த்திடச் சதுர்வேத வஞ்சன்
    விதித்தானிவ் வல்லலெல்லாம்
  வீழும் படிக்குனது மவுனமந் த்ராதிக்ய
    வித்தையை வியந்தருள்வையோ
நாதவடி வாகிய மஹாமந்த்ர ரூபியே
    நாதாந்த வெட்டவெளியே
  நற்சமய மானபயிர் தழையவரு மேகமே
    ஞானஆ னந்தமயிலே
வாதமிடு பரசமயம் யாவுக்கும் உணர்வரிய
    மகிமைபெறு பெரியபொருளே
  வரைரா சனுக்கிருகண் மணியாம் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

பொருள்:

வெள்ளி, 3 அக்டோபர், 2014

SONG # 7...THAYUMAANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KAATHALI'....பாடல் # 7...தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'...


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 7.
தூளேறு தூசுபோல் வினையேறு மெய்யெனுந்
    தொக்கினுட் சிக்கிநாளுஞ்
  சுழலேறு காற்றினிடை அழலேறு பஞ்செனச்
    சூறையிட் டறிவைஎல்லாம்
நாளேற நாளேற வார்த்திக மெனுங்கூற்றின்
    நட்பேற உள்ளுடைந்து
  நயனங்கள் அற்றதோர் ஊரேறு போலவே
    நானிலந் தனில்அலையவோ
வேளேறு தந்தியைக் கனதந்தி யுடன்வென்று
    விரையேறு மாலைசூடி
  விண்ணேறு மேகங்கள் வெற்பேறி மறைவுற
    வெருட்டிய கருங்கூந்தலாய்
வாளேறு கண்ணியே விடையேறும் எம்பிரான்
    மனதுக் சிசைந்தமயிலே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

பொருள்:

புதன், 1 அக்டோபர், 2014

SONG # 6.....THAYUMANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KAATHALI'....பாடல் # 6, தாயுமானவடிகள் அருளிய, 'மலைவளர் காதலி'..


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 6,
பாகமோ பெறஉனைப் பாடஅறி யேன்மல
    பரிபாகம் வரவும்மனதில்
  பண்புமோ சற்றுமிலை நியமமோ செய்திடப்
    பாவியேன் பாபரூப
தேகமோ திடமில்லை ஞானமோ கனவிலுஞ்
    சிந்தியேன் பேரின்பமோ
  சேரஎன் றாற்கள்ள மனதுமோ மெத்தவுஞ்
    சிந்திக்கு தென்செய்குவேன்
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ
    முற்றுமாற் சரியமோதான்
  முறியிட் டெனைக்கொள்ளும் நிதியமோ தேடஎனின்
    மூசுவரி வண்டுபோல
மாகமோ டவும்வல்லன் எனையாள வல்லையோ
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
பொருள்:

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

SONG # 5....THAYUMANAVADIGAL ARULIYA..'MALAIVALAR KAATHALI'...பாடல் # 5... தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'....

அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 5..
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
    புராந்தகி த்ரியம்பகிஎழில்
  புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள
    புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
    நாதாந்த சத்திஎன்றுன்
  நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே
    நானுச்ச ரிக்கவசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ
    அகிலாண்ட கோடிஈன்ற
  அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
    ஆனந்த ரூபமயிலே
வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
பொருள்:

திங்கள், 29 செப்டம்பர், 2014

SONG # 4....THAYUMAANAVADIGAL ARULIYA 'MALAI VALAR KAATHALI'......பாடல் # 4.. தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'....

அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 4.. 
மிடியிட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலமெனவும்
    மெய்யெலாம் உள்ளுடைந்து
  வீறிட்ட செல்வர்தந் தலைவாயில் வாசமாய்
    வேதனைக ளுறவேதனுந்
துடியிட்ட வெவ்வினையை ஏவினான் பாவிநான்
    தொடரிட்ட தொழில்க ளெல்லாந்
  துண்டிட்ட சாண்கும்பி யின்பொருட் டாயதுன
    தொண்டர்பணி செய்வதென்றோ
அடியிட்ட செந்தமிழின் அருமையிட் டாரூரில்
    அரிவையோர் பரவைவாயில்
  அம்மட்டும் அடியிட்டு நடைநடந் தருளடிகள்
    அடியீது முடியீதென
வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

பொருள்:

முதலில் சில சொற்களுக்கான பொருளை மட்டும் பார்க்கலாம்..மிடி - வறுமை. கலம் - மட்பாண்டம். வாசம் - உறைவிடம்.   துடி - நடுக்கம்.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

SONG # 3....THAYUMANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KAATHALI'....பாடல் # 3... தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'..


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!
பாடல் # 3..
பூதமுத லாகவே நாதபரி யந்தமும்
    பொய்யென் றெனைக்காட்டிஎன்
  போதத்தின் நடுவாகி அடியீறும் இல்லாத
    போகபூ ரணவெளிக்குள்
ஏதுமற நில்லென் றுபாயமா வைத்துநினை
    எல்லாஞ்செய் வல்லசித்தாம்
  இன்பவுரு வைத்தந்த அன்னையே நின்னையே
    எளியேன் மறந்துய்வனோ
வேதமுத லானநல் லாகமத் தன்மையை
    விளக்கும்உள் கண்இலார்க்கு
  மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும்
    வீறுவா தம்புகலுவாய்
வாதநோ யாளர்க்கும் எட்டாத முக்கணுடை
    மாமருந் துக்கமிர்தமே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண் உமையே.
பொருள்:

வேதமுத லானநல் லாகமத் தன்மையை
    விளக்கும்உள் கண்இலார்க்கு
  மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும்
    வீறுவா தம்புகலுவாய்
வாதநோ யாளர்க்கும் எட்டாத முக்கணுடை
    மாமருந் துக்கமிர்தமே....."நான்மறைகள் மற்றும், திருமுறைகளாகிய ஆகமங்களின் தன்மையை,  விளக்கும் உள்முகக் கண் அதாவது அறிவுக் கண் இல்லாதவர்க்கும், உன் புகழைக் கேட்கும் பேறில்லாத‌ செவிடர்க்கும்,  வீண் வாதம் செய்வதில் மிக்க விருப்புடைய‌வர்க்கும் கிட்டாத, மூன்று திருவிழிகளை உடைய, மாமருந்தாகிய அமிர்தத்துக்கும் அமிர்தம் போன்றவளே!.."

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

SONG # 2.. THAYUMANNAVDIGAI ARULIYA MALAIVALAR KAATHALLI.....பாடல் # 2.. தாயுமானவடிகள் அருளிய மலைவளர் காதலி.


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!...
பாடல் # 2..
தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
      சிற்றிடையி லேநடையிலே
   சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே
      சிறுபிறை நுதற்கீற்றிலே
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்த
      பொடியிலே அடியிலேமேல்
   பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே
      புந்திதனை நுழைய விட்டு
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே
      நின்னடியர் கூட்டத்திலே
   நிலைபெற்ற அன்பிலே மலைவற்ற மெய்ஞ்ஞான
      ஞேயத்தி லேயுன்இருதாள்
மட்டிலே மனதுசெல நினதருளும் அருள்வையோ
      வளமருவு தேவை அரசே
   வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
      வளர்காத லிப்பெண்உமையே.

வியாழன், 25 செப்டம்பர், 2014

THAYUMANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KATHALI'...தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி!'.


அன்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்!.

அனைவருக்கும் நவராத்திரி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!.. நம் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அம்பிகையின் அருளாட்சி நிறைய வேண்டுகிறேன்!..

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

SRI GANESHA CHARANAM....ஸ்ரீ கணேச சரணம்!..


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

நாளை 29/8/2014 விநாயக சதுர்த்தி..ஸ்ரீவிநாயகரைப் பற்றியும், விநாயக சதுர்த்தி பூஜை பற்றியும் இங்கு பதிவிட்டிருக்கும் முந்தைய பதிவுகளுக்கு கீழே சொடுக்குங்கள்.




இங்கு கர்நாடகாவில் இதுவே பெரிய பண்டிகை.. தீபாவளி கூட சிறப்பாகக் கொண்டாடமாட்டார்கள்..

சனி, 16 ஆகஸ்ட், 2014

SRI KRISHNA VAIBHAVAM..ஸ்ரீ கிருஷ்ண வைபவம்.


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!

இன்று (17/8/2014)  கோகுலாஷ்டமி திருநாள்..கோகுலாஷ்டமி குறித்தும், அதைக் கொண்டாடும் விதம் குறித்தும் அறிய இங்கு சொடுக்கவும்.

சின்னக் கண்ணன் லீலைகள் சொல்லச் சொல்ல இன்பமல்லவா!.. 

பூர்ணாவதாரம் என்று புகழப்படுகின்ற  ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளில் மயங்காதவர்கள் யார்?. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே மண்ணுலகோர் உய்வுறும் வண்ணம் தன் தனிப்பெருங்கருணையால் ஒரு மானிடக் குழந்தையாக அவதரித்தது.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

PERUKI VARUM KAAVIRI (AADI PERUKKU..3/8/2014) ...... பெருகி வரும் காவிரி (ஆடிப் பெருக்கு, 3/8/2014).

அன்பர்களுக்கு வணக்கம். ஆடி பெருக்கு தினத்தில் காவிரித் தாய் பொங்கிப் பெருகுவதைப் போல் நம் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நலமும் வளமும் பொங்கிப் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

 முந்தைய வருடங்களில், ஆடி பெருக்குக்கான சிறப்புப் பதிவில், காவிரி ஆறு தோன்றிய புராணம், ஆடி பெருக்கில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் என்று பார்த்தோம்.   பதிவிற்கு இங்கு சொடுக்கவும்.

காவிரியை ஒரு 'ஆறு' என்ற அளவில் மட்டும் நம் தமிழ் மக்கள் நினைப்பதில்லை. பழங்காலத்திலிருந்து, ஒரு பெண்ணாய், சோறூட்டும் அன்னையாய், ஒரு பெரிய கலாசாரத்திற்கு வித்தாய், வாழ்வாதாரமாய்

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

PACHCHAI PATHIGAM...திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த 'பச்சைப் பதிகம்' (திருநள்ளாறு தேவாரத் திருப்பதிகம்)

அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


இந்தத் திருப்பதிகத்தை, ஞானசம்பந்தப் பெருமான் நள்ளாற்றில் அருளிச் செய்தார்.. மதுரையில், சமணர்களோடு நடைபெற்ற அனல் வாதத்தில், இந்தப் பதிகத்தை நெருப்பில் இட, அது எந்த விதத்திலும் நெருப்பால் பாதிக்கப்படாமல், பச்சைப்பதிகமாய் நின்று சைவத்தை நிலைநாட்டியது

பண்: பழந்தக்கராகம்.

புதன், 2 ஏப்ரல், 2014

YAMUNA JAYANTHI..5/4/2014....யமுனா ஜெயந்தி!!!!...


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

நம் பாரத பூமியில், நீர் வளம் சேர்க்கும் ஆறுகள் அனைத்தும் தெய்வாம்சம் பொருந்தியவையாகக் கொண்டாடப்படுகின்றன.. கங்கை போலவே புனிதமாகக் கருதப்படும் மற்றொரு ஆறு யமுனை.. அந்த யமுனை பூமிக்கு வந்த திருநாளே 'யமுனா ஜெயந்தி'யாகச் சிறப்பிக்கப்படுகின்றது.. இந்தப் பதிவில், யமுனையைப் பற்றியும், 'யமுனா ஜெயந்தி' கொண்டாடப்படும் முறை பற்றியும் நாம் பார்க்கலாம்!..

வியாழன், 6 பிப்ரவரி, 2014

RATHA SAPTHAMI...ரத சப்தமி!....(6/2/2014).


உலகுக்கு ஒளி தந்து உயிர்க்கெல்லாம் நலம் தரும்  சூரியபகவான் தோன்றிய நன்னாளே  'ரத சப்தமி'.. 

தை அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ சப்தமி திதியே ரத சப்தமி திதியாக அனுசரிக்கப்படுகின்றது..இது,ஆரோக்கிய சப்தமி, சூர்ய ஜெயந்தி, அசலா சப்தமி,மஹா சப்தமி, ஜெய சப்தமி, ஜெயந்தி சப்தமி  என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றது.

ரத சப்தமி தினத்தன்று, சூரிய பகவான், தன் ஏக சக்கர ரதத்தை, வடக்காகத் திருப்பி, தன் பயணத்தைத் தொடங்குகிறார்.  தை முதல் நாளிலிருந்தே உத்தராயாணப் புண்யகாலம் துவங்கி விட்டாலும்,  தேவர்களின் பகல் பொழுது துவங்கும் நாள் இதுவே.

ரத சப்தமி தினத்திலிருந்தே சூரிய பகவான் தன் வெப்பம் நிறைந்த கதிர்களின் அளவை சிறிது சிறிதாகக் கூட்டுகிறார்.

ரத சப்தமி தினத்தன்று செய்யப்படும் ஸ்நானம், அர்க்கியம், விரதம், பூஜைகள், தானம் இவற்றுக்கு மகத்தான நற்பலன்கள் உண்டு.. குறிப்பாக, அன்றைய தினம் செய்யப்படும் தானங்களின் பலன்கள், கிரகண புண்ய காலத்தில் செய்யப்படும் தானங்களால் பெறப்படும் நற்பலன்களுக்கு இணையாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.. 

ரத சப்தமி, பித்ரு வழிபாடுகள் செய்வதற்கும் ஏற்ற தினம். அன்றைய தினம் தர்ப்பணம் செய்து பித்ருக்களின் ஆசியைப் பெறுவது வழக்கம்.. ரத சப்தமிக்கு அடுத்த நாள் பீஷ்மாஷ்டமி, பீஷ்மர் முக்தியடைந்த நாளாகக் கருதப்படுகின்றது.. அன்றைய தினம் பீஷ்மருக்கும் தர்ப்பணம் செய்வது வழக்கமாக இருக்கிறது.

ரத சப்தமி தினத்தன்று அதிகாலை அருணோதய காலத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்.. ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவது சிறப்பு. தலையில் ஏழு எருக்கம் இலைகளை வைத்து, அதன் மேல் அக்ஷதை மற்றும் விபூதியை வைத்து ஆண்களும், விபூதிக்குப் பதிலாக மஞ்சள் பொடியை வைத்து பெண்களும் நீராடுவார்கள்.. எருக்கம் இலைக்கு அர்க்க பத்ரம் என்றே பெயர். அர்க்கன் என்பது சூரிய பகவானின் மற்றொரு பெயராகும். எருக்கம் இலைக்கு, சூரிய பகவானின் ஒளிக்கதிர்களிலிருந்து நன்மை தரும் கதிர்வீச்சுக்களை ஈர்த்து உடலுக்குத் தரும் சக்தி உண்டு. இது உடல்நலத்தை வலுப்படுத்த வல்லது.. கண் பார்வைக் குறைபாடுகளை நீக்கும் சக்தி இந்த வழிபாட்டுக்கு இருப்பதாக ஐதீகம். ஆகவே ஸ்நானத்திற்கு எருக்கம் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதன் பின், சூரியோதய காலத்தில் அர்க்கியம் சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு மிகப் பிடித்தமான வழிபாடு இது... இதை நீர் நிலைகளில் செய்தால் மிகவும் நல்லது..த்வாதச(பன்னிரண்டு) ஆதித்யர்களை நினைவு கூர்ந்து வணங்குதல் சிறப்பு..

யோகாசனப் பயிற்சி பெற்றவர்கள், பன்னிரண்டு முறை சூரிய நமஸ்காரம் செய்து  வழிபாடு செய்வது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது..

இல்லங்களின் வாயில்களிலும், பூஜை அறைகளிலும் அன்றைய தினம் ஏக சக்ர தேர்க்கோலம் வரைவார்கள்...   சூரிய பகவானுக்குப் பூஜை செய்ய, பிரதிமையோ அல்லது படமோ இல்லாதிருப்பின், ஒரு மரப்பலகையில் இந்தக் கோலம் வரைந்து, நடுவில் சூரியனின் படம் வரைந்து பூஜை செய்யலாம்.

ரத சப்தமி விரதம் இருப்பவர்கள், சூரியோதய காலத்திலிருந்து, சூரியாஸ்தமன காலம் வரை உபவாசம் இருப்பார்கள். இவ்வாறு உபவாசம் இருந்து வழிபாடு செய்வதால் பித்ரு தோஷம் அகன்று, உடல் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்..

இவ்வாறு விரதமிருந்து வழிபாடு செய்வதால் கிடைக்கும் நற்பலன்களை விளக்கும் புராணக் கதை:

யசோவர்மன் என்ற அரசன் காம்போஜ நாட்டை ஆண்டு வந்தான். குடிமக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு நன்முறையில் அரசாட்சி செய்து வந்த அவனது  ஆட்சியில், மக்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்..

எத்தனையோ செல்வங்கள் இருந்தும், அரசன் யசோவர்மனுக்கு  குழந்தைப் பேறில்லை.. இதற்காக, இறைவனைத் துதித்து, மனமுருகி, பிரார்த்தனைகள் பல செய்தான் யசோவர்மன். அதன் பலனாக, ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்தாள் அவன் மனைவி. ஆனால் அந்த மகவு உடல் ஆரோக்கியம் குன்றிய நிலையில் பிறந்தது.

 ஆண்டுகள் பல சென்றன. இளவரசனின் உடல் ஆரோக்கியம் சீராகவே இல்லை.. எப்போதும் நோயுற்றிருந்தான். இதனால் மனம் நொந்து வருந்திய நிலையில் யசோவர்மன் இருந்த போது, அவனது நாட்டுக்கு முனிவர் ஒருவர் வருகை புரிந்தார். அவரை வணங்கி, தக்க முறையில் உபசரித்த மன்னன், தனது குறையைச் சொல்லி, அதற்கான பரிகாரம் என்ன என்பதை உரைக்குமாறு, முனிவரை வேண்டினான். 

முனிவர் தமது ஞானதிருஷ்டியால், இளவரசனது முற்பிறவியை அறிந்தார். அதன் பின் அரசனிடம், அவன் மகன் முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவாக இப்பிறவியில் இம்மாதிரியான ஆரோக்கியமற்ற உடலமைப்பைப் பெற்றிருக்கிறான் என்றும், அது குணமடைய, இளவரசன், ரத சப்தமி தினத்தில், முறையாக, சங்கல்பம் செய்து, உபவாசம் இருந்து, சூரியபகவானைப் பூஜித்து, தானங்கள் செய்து வழிபாடு செய்தால் உடல் ஆரோக்கியம் பெற்று நலமடைவான் என்றும் கூறினார்.

இளவரசன், முனிவர் கூறியவாறே செய்து, உடல் நலம் பெற்று, அரசு பொறுப்பை ஏற்று நல்லாட்சி புரிந்தான்.

ரத சப்தமி பூஜை முறைகள்:

சூரிய பகவானுக்கு ஷோடசோபசார பூஜைகள் செய்வதே சிறப்பானதாகக் கருதப்படுகின்றது..

பூஜை செய்யும் இடத்தை தூய்மை செய்து, அலங்கரித்து, சூரிய பகவானின் படத்திலோ, விக்ரகம் இருந்தால் விக்ரகத்திலோ, சூரியனுக்குரிய ஸ்படிக உருவிலோ பூஜை செய்யலாம். இல்லையெனில், முன் சொன்னது போல், கோலம் வரைந்தும் பூஜிக்கலாம்.

முதலில் விநாயகருக்குப் பூஜை செய்து, அதன் பின், குலதெய்வத்துக்குப் பூஜை செய்ய வேண்டும்.. சூரிய பகவான் ஆத்ம காரகர் மற்றும் பித்ருகாரகர். குல முன்னோர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக, குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

அதன் பின், தியானம், ஆவாஹனம் முதலான பதினாறு வகையான உபசாரங்களைச் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.. சூரியபகவானுக்கு உகந்த நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் கருதப்படுகின்றது.. இயன்ற மற்ற நிவேதனங்களும் சமர்ப்பிக்கலாம்.

பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக மன்னிப்புக் கோரி, பூஜையை நிறைவு செய்யவும்.. பிரசாதங்களை கட்டாயம் விநியோகிக்க வேண்டும்.

சூரிய பகவானை, பூஜை நிறைவடைந்த உடனேயே யதாஸ்தானம் செய்து விடலாம். உபவாசம் இருப்பவர்கள், மறு நாள் புனர் பூஜை செய்து யதாஸ்தானம் செய்யலாம்.

விரதங்களுள் ரத சப்தமி விரதம் மிகச் சிறப்பானதாகும். இந்த விரதத்தை அனுசரிக்க, உடல் நலத்தோடு வேண்டிய வரங்கள் அனைத்தும் பெறலாம்.

ஞாயிறு போற்றுதும்!.. ஞாயிறு போற்றுதும்!..

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

VASANTHA PANCHAMI....வசந்த பஞ்சமி(4/2/2014).


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்...

ஒரு வருடத்தில் கொண்டாடப்படும் நான்கு நவராத்திரிகளில், 'சியாமளா நவராத்திரி', தை அமாவாசை மறு நாள் துவங்கிக் கொண்டாடப்படுகின்றது..(சியாமளா நவராத்திரி பற்றிய சென்ற வருடப் பதிவுக்கு இங்குசொடுக்கவும்..). சாரதா நவராத்திரியின் பஞ்சமி திதி , ஸ்ரீலலிதா தேவியின் திருஅவதார தினமாகக் கொண்டாடப்படுவது போல், சியாமளா நவராத்திரியின் பஞ்சமி திதி (சுக்ல பஞ்சமி திதி), ஞானாம்பிகையான ஸ்ரீசரஸ்வதி தேவியின் திருஅவதார தினமாகக் கொண்டாடப்படுகின்றது..

இன்று, (4/2/2013), வசந்த பஞ்சமி தினம். இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீபஞ்சமி என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றது...மானிடர்கள் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானமே... அதை அருளும் சரஸ்வதி தேவி அவதரித்த தினமாதலால் ஸ்ரீ பஞ்சமி என்ற பெயரில் வழங்கப்படுகின்றது..வங்காளத்தில் இது சரஸ்வதி பூஜை தினமாகவே கொண்டாடப்படுகின்றது..

ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், லௌகீக உலகில் அறிவு சார்  கலைகளில் முன்னேற்றம் கிடைப்பது மட்டுமல்லாது, ஆன்மீகத்தில் உயர்நிலைகளை அடைதலும் கிட்டும் என்பது நம்பிக்கை..

வாக் தேவியான அம்பிகையே ஸ்ரீராகவேந்திரருக்கு, அவர் சன்யாச ஸ்வீகாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தைப் புலப்படுத்தியவள்.. ஞானாபீஷ்டம் அம்பிகையின் அருளாலேயே சித்தியாகும்...ஸ்ரீவேத வியாசர், பிருஹஸ்பதி, யாக்ஞவல்கியர், வசிஷ்டர், பராசரர், பரத்வாஜர் முதலான எண்ணற்ற ரிஷிகள், சரஸ்வதி தேவியை வழிபட்டே ஞான ஒளி பெற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஜோதிடத்தில், ஒரு ஜாதகரின் ஐந்தாவது இடம் நுண்ணறிவுக்கான இடமாகக் குறிக்கப்படுகின்றது. பஞ்சமி திதியன்று செய்யப்படும் இறைவழிபாடுகள், நுண்ணறிவை சரியான பாதையில் செலுத்த வல்லவை.

இது தென்னிந்தியாவில் சரஸ்வதி தேவி குடிகொண்டிருக்கும் ஆலயங்களிலும், வட இந்தியாவின் பல மாநிலங்களில், இல்லங்களில் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் கொண்டாடப்படுகின்றது..வசந்த பஞ்சமி, 'வசந்த ருது'வின் ஆரம்ப தினமாகவே கருதப்படுகின்றது.. தென்னிந்தியாவின் பல சிவன் கோயில்களில் இந்த தினத்தில், ஸ்வாமி புறப்பாடு நடைபெறுகிறது..இந்தியாவின் தென்கிழக்கு மாகாணங்கள் சிலவற்றில், வசந்த பஞ்சமி தினம், புது வருடத் துவக்கமாகவே கொண்டாடப்படுகின்றது.

வசந்த பஞ்சமி தின வழிபாடுகள்:

வசந்த பஞ்சமி தினத்தில், விரதம் இருந்து பூஜைகள் செய்வது மிகச் சிறப்பு... அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது..எந்த வகையான செயலாக இருந்தாலும் வெற்றிகரமாக முடிய இன்று துவங்கலாம்..ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான்.

பூஜை முறைகள்:

பூஜை முறைகள் கொஞ்சம் விஸ்தாரமானவை..பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 முதல் 11 வரை. இது பூர்வாஹன காலம் என்று அழைக்கப்படுகின்றது.

முதலில், தூய்மையான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு கிழக்குப் பார்த்து பூஜை மேடையை அமைக்க வேண்டும்.. கோலங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கவும்.. பூஜை துவங்கும் முன்பாக, தூபங்கள் கமழச் செய்யவும். தீபங்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஏற்றி வைத்தல் சிறப்பு.

பரிபூர்ணத்தைக் குறிக்கும் கலச ஸ்தாபனம், விநாயகர் பூஜை முதலியவற்றை முதலில் செய்ய வேண்டும். அதன் பின், ஸ்ரீவிஷ்ணுவையும் சிவனாரையும் விக்ரகங்கள் அல்லது படங்களில் ஆவாஹனம் செய்து பூஜைகள் செய்ய வேண்டும்.

அம்பிகை சத்வ குண ஸ்வரூபிணி... அம்பிகையின் வெண்பட்டு வஸ்திரம், ஸ்படிக மாலை முதலியன சத்வ குணத்தையும் தூய்மையையும் குறிக்கின்றன.. ஆகவே சத்வகுண ஸ்வரூபனான  திருமால் பூஜை செய்யப்படுகின்றார்.. சில புராணங்களின்படி, சரஸ்வதி தேவி, சிவனாரின் சகோதரியாகக் கருதப்படுகின்றாள். ஆகவே சிவனாரும் பூஜையில் இடம் பெறுகின்றார்.

 சிவ, விஷ்ணு பூஜைகளுக்குப் பின், சரஸ்வதி தேவியின் பிரதிமைக்கு/படத்துக்குப் பூஜை செய்ய வேண்டும்.. வெண்ணிற பட்டு வஸ்திரம் அல்லது மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற மலர்கள் அல்லது மல்லிகை மலர்களால் மாலைகள் சூட்டி, (இயன்றோர் முத்து மாலைகள், ஸ்படிக மாலைகளும் சாற்றலாம்) அலங்கரித்து, மல்லிகை, தாமரை, செண்பக மலர்களால் அஷ்டோத்திரம் கூறி அர்ச்சனை செய்யவும்.அம்பிகையின் பன்னிரு திருநாமங்களை(த்வாதச நாமங்கள்)கூறி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.

வெண்மை தூய்மைக்கும், மஞ்சள் ஞானத்திற்கும் குறியீடாகக் கருதப்படுகின்றது.. குரு பகவானுக்கும், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கும் மஞ்சள் வஸ்திரங்கள் சாற்றி வழிபாடு செய்வது மரபு. ஆகவே அம்பிகைக்கு வெண்ணிற‌ அல்லது மஞ்சள் நிற வஸ்திரங்களைச் சாற்றுகிறோம்.

நிவேதனங்களில் முக்கியமானவை, குங்குமப்பூ ஹல்வா மற்றும் குங்குமப்பூ கலந்த கல்கண்டு, வெல்லப் பொங்கல்.. வடமாநிலங்களில் மஞ்சள் நிற இனிப்புகள் சிறப்பிடம் பெறுகின்றன..

குங்குமப்பூ, ஆயுர்வேத மூலிகைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.. மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, கண் பார்வைக் கோளாறுகளை நீக்க வல்ல மருந்தாகவும் செயல்படுகின்றது.. அறிவு வளர்ச்சிக்கு மிக அவசியமான இவற்றைப் பெறும் நோக்கத்துடனேயே குங்குமப்பூ நிவேதனங்களில் பிரதானப்படுத்தப்படுகின்றது.. இவை தவிர உலர்பழங்கள் உள்ளிட்ட எதையும் நிவேதனமாக வைக்கலாம்.. பாயசம்,  மற்ற இனிப்புகள் போன்றவையும் நிவேதிக்கலாம்..

வாசனைப் பொருட்கள் சேர்த்த தாம்பூலம் நிவேதித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, தீப ஆரத்தி எடுக்கவும்.. பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகள் நீங்க, மன்னிப்புக் கோரி வணங்கவும்..பூஜை நிறைவில் மஞ்சள் நீரில் இரு தீபங்கள் ஏற்றி ஆரத்தி செய்யலாம்.

பூஜை தினத்தன்று மாலையிலோ அல்லது மறு நாள் காலையிலோ, இயன்றதை நிவேதனமாகச் செய்து  புனர் பூஜை செய்து, அம்பிகையையும், மற்ற தேவதைகளையும் யதாஸ்தானம் செய்யவும்.

விருப்பமிருப்பவர்கள் மேற்கூறிய பூஜை முறைகளின்படி பூஜை செய்யலாம். சரஸ்வதி பூஜைக்கென சாரதா நவராத்திரியில் செய்யும் பூஜை முறைகளையும் பின்பற்றலாம்.

விஸ்தாரமான பூஜைகள் செய்ய இயலாதோரும், ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது பிரதிமையை அலங்கரித்து வைத்து, தெரிந்த சரஸ்வதி துதிகளைப் பாராயணம் செய்து, இயன்ற நிவேதனங்கள் படைத்து வழிபாடு செய்யலாம்.

ஸ்ரீசரஸ்வதி தேவியைப் போற்றும் 'ஸ்ரீசரஸ்வதி அந்தாதி' துதிக்கு இங்கு சொடுக்கவும்.

அம்பிகையின் அவதாரம் குறித்த புராணக் கதை:

ஆதியில், பிரம்ம தேவர் அனைத்து உலகங்களையும், உயிரினங்களையும் படைத்த பின்னரும், அவருக்கு ஏதோ குறை இருப்பது போலவே தோன்றியது. அனைத்துப் படைப்புகளும் அமைதியாக, மௌனமாக‌ இருந்தன. இது குறித்து சிந்தித்தவாறே பிரம்ம தேவர் தம் கமண்டலத்தை எடுத்தார். அப்போது அதிலிருந்து சில துளிகள் கீழே சிந்தின. அவை ஒருங்கிணைந்து, ஒரு பெரும் சக்தியாக, மிகுந்த பிரகாசத்துடன் உருவெடுத்தன. ஒரு அழகிய பெண், நான்கு திருக்கரங்களுடன் கூடிய உருவில் பிரம்ம தேவர் முன் தோன்றினாள்.. சுவடிகள், ஸ்படிக மாலை, வீணை முதலியவற்றைத் தாங்கியவளாகத் தோன்றிய அந்த மஹாசக்தி, தன் வீணையை மீட்டி, தேவகானம் இசைக்கத் தொடங்கினாள்.. 

ஞான ஒளிப் பிழம்பான அம்பிகை, கானம் இசைக்கத் தொடங்கியவுடன், பிரம்ம தேவரின் படைப்புகள், ஒசை  நயம் பெற்றன.. ஆறுகள் சலசலக்கும் ஒலியுடன் ஓடத் துவங்கின. கடல் பெருமுழக்கத்தோடு அலைகளைப் பிரசவித்தது.. காற்று பெருத்த  ஓசையுடனும்,  முணுமுணுக்கும் ஒலியுடனும் வீசியது.. மானிடர்கள் மொழியறிவு பெற்றனர்.

பிரம்மதேவர் மகிழ்ந்தார்..வாக்வாதினி, வாகீசுவரி, பகவதி  என்றெல்லாம் அம்பிகையைப் போற்றித் துதித்தார்.

இவ்வாறு ஸ்ரீசரஸ்வதி அவதரித்த தினமே 'வசந்த பஞ்சமி'.

வசந்த பஞ்சமி தினத்தில் சங்கீதத்தாலும் நாம சங்கீர்த்தனம், பஜனை முதலியவற்றாலும் அம்பிகையை ஆராதிப்பது சிறப்பு..

பெரும்பாலான வடமாநிலங்களில், இன்று பட்டம் விடும் திருவிழா கொண்டாடப்படுகின்றது.. வண்ணமயமான பட்டங்கள் செய்து பறக்க விட்டு, வசந்த காலத்தை வரவேற்கின்றனர். இது ஒரு போட்டியாகவும் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

நம் உள்ளங்களில் ஞான தீபமேற்ற வேண்டி அம்பிகையைத் தொழுது வணங்குவோம்!..

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

புதன், 11 டிசம்பர், 2013

GITA JEYANTHI..(13/12/2013)...கீதை ஜெயந்தி.


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!!!!.

கார்த்திகை (மார்கசீர்ஷ‌) மாதம், வளர்பிறை ஏகாதசி,  அர்ஜூனனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட புண்ணிய தினம். ஒவ்வொரு வருடமும், இது    'கீதா ஜெயந்தி' தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

இறைவனின் திருஅவதாரங்கள், மஹான்கள் தோன்றிய தினத்தையே 'ஜெயந்தி'யாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், ஒரு புனித நூலுக்கு ஜெயந்தி தினம் கொண்டாடுவது என்பது 'பகவத் கீதை'க்கு மட்டுமே. வேறு எந்த நூலுக்கும் இந்தப் பெருமை கிடையாது.

26 வகையான கீதைகள் இருந்தாலும், உண்மையில், 'கீதை' என்னும் சொல், 'பகவத் கீதை'யையே குறிப்பதாக இருக்கிறது.

முதன் முதலில் கீதை உபதேசிக்கப்பட்டது சூரியபகவானுக்கே. காலப் போக்கில், இதன் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், மீண்டும்  இதை அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக, ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவே கூறுகிறார்.

அலைகடலெனத் திரண்டிருக்கும் படைவீரர்களின் நடுவில், பார்த்தனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட தினமே 'கீதா ஜெயந்தி'. பார்த்த சாரதியான ஸ்ரீகிருஷ்ணர், மன்னுயிர்கள், வாழ்வென்னும் ரத யாத்திரையை வெற்றிகரமாக நிறைவேற்றி, தம்மை வந்து அடையும் பொருட்டு உபதேசித்த 'பகவத் கீதை' பிரஸ்தானத்திரயங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. 'உபநிஷதம், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை' இம்மூன்றும் பிரஸ்தானத்திரயம்.

கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா  - (மஹா. பீஷ்ம. 43/1)

என்று வியாஸமஹரிஷி, கீதையின் பெருமையைப் போற்றுகிறார்.

வேதங்கள் கூறும் தத்துவங்களின் சாரமே பகவத் கீதை. கீதையின் பெருமையை விளக்க, வார்த்தைகளே இல்லை. 

கீதையென்னும் ஒப்பற்ற தத்துவநூல், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டினரையும் ஆகர்ஷித்ததால், கீதா ஜெயந்தி, சிங்கப்பூர், மலேசியா, பாலி, கம்போடியா, ஆக்லாந்து, பெர்த், மெர்ல்போன், கேன்பரா உட்பட பல நாடுகளில் கொண்டாடப்படுகின்றது.

பகவத் கீதையை உயிரென மதிப்பவர் பலர் வாழும் நம் நாட்டில், கீதா ஜெயந்தி, மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகின்றது.வடநாட்டின் பல மாநிலங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும், கீதை நூலுக்கும் பூஜைகள் செய்து, மலரிட்டு வணங்கி வழிபடுகிறார்கள்.

அன்றைய தினம் ஏகாதசி என்பதால், முழு உபவாசமிருக்கிறார்கள். தனியாகவோ பலர் சேர்ந்தோ, கீதையின் 700 ஸ்லோகங்களையும் பாராயணம் செய்கிறார்கள்.

அர்ஜூனனுக்கு, ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசம் செய்த இடமாகிய குருக்ஷேத்திரத்தில், கீதா ஜெயந்தி, மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அங்கு இது ஐந்து நாள் திருவிழா. பிரம்மசரோவரத்தில், தீப வரிசைகள் ஒளிர, உள்ளத்தில் ஞான ஒளி வீச வேண்டி, கீதையைப் பாராயணம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுகின்றார்கள்.

எத்தகைய துன்பத்தில் இருப்போரும், பகவத் கீதையை ஒரு முறை பாராயணம் செய்ய, தெளிவு பெறுவது நிச்சயம். இறைவனின் அமுதவாக்காக வெளிவந்த பகவத் கீதையை, இறைவனுக்குச் சமமாக வழிபடுகின்றோம். உபநிஷதங்களில் இருக்கும் அரிய கருத்துக்களின் சாராம்சமே பகவத் கீதை.

கீதா சாரம்:

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

யோகமே உலகப் பொருட்கள் அனைத்தின் தோற்றமும் ஒடுங்குதலும் ஆகும் என்கிறார் ஸ்ரீஅரவிந்தர். கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் 'யோகம்' என்ற சொல்லுடனே வழங்கப்படுகின்றன. விஷாத யோகம்,சாங்கிய யோகம்,கர்மயோகம் என்ற பெயர்களுடன் தொடருகின்ற  இந்த அத்தியாயங்களின் உட்கருத்தை உண்மையாக அறிய விழைவோர் உண்மையில் பேறு பெற்றவர்களே!!.

கீதா ஜெயந்தி தினத்தன்று, நம்மால் இயன்றவரை, பகவத் கீதையைப் பாராயணம் செய்வோம். முடிந்தால், தினமும் தொடரலாம் இதை. உள்ளத்திருள் நீங்கி, தெள்ளத்தெளிவாக, உண்மைப் பொருள் தோன்றும் நிச்சயம். 

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

VIVAHA PANCHAMI ....(7/12/2013)............விவாஹ பஞ்சமி.

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!!!

'விவாஹ பஞ்சமி' என்பது, ஸ்ரீராமனுக்கும், சீதா தேவிக்கும் திருமணம்  நிகழ்ந்த‌ புண்ணிய தினமாகும். இது மார்கசீர்ஷ மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி தினத்தில் கொண்டாடப்படுகின்றது. இது இந்தியாவில், குறிப்பாக, சீதை பிறந்த தலமாகிய ஜனக்புரியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்தப் புண்ணிய நன்னாளில், ஸ்ரீராமரையும் சீதையையும் வணங்கி வழிபடுவதும், திருக்கோயில்களுக்குச் சென்று வழிபாடு நிகழ்த்துவதும் மிகுந்த நற்பலன்களைத் தரும். குறிப்பாக , திருமணத் தடை  விலக, விவாஹ பஞ்சமி தினத்தன்று ஸ்ரீராமரைப் பூஜித்து வழிபடுவதோடு, ஸ்ரீராமர் திருக்கோயில் கொண்டருளும் கோயில்களுக்குச் சென்று அர்ச்சித்து வழிபடுவது சிறந்ததொரு பரிகாரமாகும். 

இந்தப் பதிவில், ஸ்ரீராமரது திருக்கல்யாண உற்சவத்தின் காணொளியையும், கம்ப இராமாயணம், கடிமணப் படலத்தில் இருந்து சில பாடல்களையும் அன்பர்களது மேலான பார்வைக்காகச் சமர்ப்பிக்கிறேன்.

காணொளியை வலையேற்றிய அன்பருக்கு என் மனமார்ந்த நன்றி!!



கம்ப இராமாயணம் - கடிமணப் படலம்

சீதையும் இராமனும் மணத் தவிசில் வீற்றிருத்தல்
மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து
இன் துணை அன்னமும், எய்தி இருந்தார்;
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்.  

இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக் கொடுத்தல்
கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர்,
'பூமகளும் பொருளும் என, நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி' என்னா,
தாமரை அன்ன தடக் கையின், ஈந்தான்.  

வாழ்த்து ஒலியும், மலர் மாரியும்

அந்தணர் ஆசி, அருங் கல மின்னார்
தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர்
வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின மாதோ.  

வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ,
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்,
தான் நகு நாள்மலர், என்று இவை தம்மால்,
மீன் நகு வானின் விளங்கியது, இப் பார்.  

இராமன் சீதையின் கையைப் பற்றி, தீ வலம் வருதல்

வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான்.  

இடம் படு தோளவனோடு, இயை வேள்வி
தொடங்கிய வெங் கனல் சூழ் வரு போதின்,
மடம் படு சிந்தையள், மாறு பிறப்பின்,
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள்.  

அம்மி மிதித்து, அருந்ததி காணுதல்

வலம்கொடு தீயை வணங்கினர், வந்து,
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி,
இலங்கு ஒளி அம்மி மிதித்து, எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார்.  

இராமன் சீதையோடு தன் மாளிகை புகுதல்

மற்று உள, செய்வன செய்து, மகிழ்ந்தார்;
முற்றிய மா தவர் தாள் முறை சூடி,
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்,
பொற்றொடி கைக் கொடு நல் மனை புக்கான்.  

பல் வகை மங்கல ஆரவாரம்

ஆர்த்தன பேரிகள்; ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை; ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல் கலை; ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்த்தன வண்டு இனம்; ஆர்த்தன வேலை.  


ஸ்ரீசீதா, லக்ஷ்மண, ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருவருளை வேண்டி,

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.