அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!...
விரதப் பதிவுகள் போட்டு கொஞ்சம் நாளானதால், இன்னிக்கு ஒரு விரதப் பதிவு!.. நாம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விரதங்கள், அவற்றின் வழிமுறைகள், கதைகள் எனப் பார்த்து வருகிறோம் இல்லையா.. அந்த வரிசையில், இன்று கொண்டாடப்படும் ஒரு விரதம் பற்றி பார்க்கலாம்.. வழக்கமாக இந்தி திரைப்படங்கள், தொடர்கள் பார்ப்பவர்களுக்கு இந்த விரதம் பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும்.. பெண்கள், மாலை வேளையில் சந்திரனை, மாவு சலிக்கும் சல்லடையால் நோக்கி வணங்கும் காட்சி பெரும்பாலனவற்றில் இடம் பெற்றிருக்கும். அந்த விரதம் தான் நாம் இன்று காணப் போவது..' காரக சதுர்த்தி விரதம்' என்றும் சொல்லப்படும் இது 'கர்வா சௌத்' என்று வடமாநிலங்களில் பிரபலமாக வழங்கப்படுகின்றது..