![Image result for vasudeva and durga](https://i.pinimg.com/originals/eb/00/18/eb0018e8d331f6e77fd9273dbfe84510.jpg)
மாயையானவள், தேவகியின் கரம் சேர்ந்தாள்!.. விலங்குகள் தாமாகப் பூட்டிக் கொண்டன. சிறையின் கதவுகள் அடை பட்டன. பகவானின் தங்கையாகப் போற்றப்படும் யோக மாயை, பெருங்குரலெடுத்து அழுதாள்!. அந்த அழுகுரலைக் கேட்ட சிறைக் காவலர்கள், ஓடிச் சென்று கம்சனிடம், தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்த செய்தியைச் சொன்னார்கள்!.. தலைவிரி கோலமாக சிறைச்சாலை நோக்கி ஓடி வந்த கம்சன், தன் தங்கையின் கரங்களில் ஒரு பெண் குழந்தை இருக்கக் கண்டு கலங்கினான்!!. 'இது கபடசாலியான மதுசூதனனின் மாயையே!' என்று தீர்மானித்த அவன், தேவகியின் கரங்களிலிருந்த, பிறப்பற்றவளும் பகவானின் தங்கையுமான அந்தக் குழந்தையை, குளத்திலிருக்கும் தாமரைக் கொடியை ஒரு யானை பிடுங்குவது போல் பிடுங்கி, பாறையில் ஓங்கி அடித்தான்!!..