![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tKloWP-RLqE8q6jNp5Rc_c1AyQpJ253zX1pzDz-8f2g_90IN9H5JERUeGXaSyTYdpfxzip0zTugDrDwJZvett5iRAfv2nVHrdXLEGYXG95NpAwvsOnJzxUbUHANexpBrvJD0oTE7GE0_c=s0-d)
தூணிலிருந்து வெளிப்பட்ட, பகவானின் நரசிம்ம ஸ்வரூபத்தைக் கண்டதும், ஹிரண்யன், ' இது நிச்சயமாக விஷ்ணுதான்' என்று உறுதி கொண்டு, தன் கதையை எடுத்துக் கொண்டு, தாக்குவதற்கு ஓடினான். பகவான், அவனைத் தம் கரங்களால் பிடித்தார். ஆயினும் அவன் நழுவி விட்டான்!.. அதன் பின்னரும், வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, அதில் தன்னுடைய விசித்திரமான திறமைகளைக் காட்டியவாறு, மீண்டும் தாக்குவதற்கு ஓடி வந்தான்.