கோகுலத்தில் நந்த பாலனுக்கு நாமகரணம் ஆகி விட்டது!!. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, கண்ணனும் பலராமனும் வளர்ந்து வந்தார்கள்!.. குட்டிக் கண்ணன், தவழத் தொடங்கி விட்டான்!!. வெகு வேகமாக அவன் தவழ்ந்து விளையாடும் அழகே அழகு!!. தவழும் போது ஒலிக்கும் தன் கால் கொலுசுகளின் ஒலியைக் கேட்க விரும்பி, இன்னும் வேகமாக, நன்றாகத் தவழ்ந்து விளையாடுவான்!..
"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
நட்பாகத் தொடர்பவர்கள்
செவ்வாய், 30 ஏப்ரல், 2019
KANNANAI NINAI MANAME.....BAGAM IRANDU... PART..41...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.41.ஸ்ரீகிருஷ்ணனுக்கு நாமகரணம்!.
குழந்தை பிறந்து நாட்கள் பல கடந்தும், நந்தபாலனுக்கு நாமகரணம் செய்வதற்கான சமயம் வாய்க்கவில்லை.. வசுதேவரின் முதல் மனைவி ரோகிணி, நந்தகோபரின் இல்லத்திலேயே பாதுகாக்கப்பட்டு வந்த சமயம் அது!.தேவகியின் வயிற்றிலிருந்த ஏழாவது கர்ப்பம், யோகமாயையால் ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப் பெற்று, ரோகிணியும் ஒரு புதல்வனை ஈன்றிருந்தாள்!..வாசுதேவனுக்கு மூத்தவனான அக்குழந்தையும் நந்தகோபரின் இல்லத்திலேயே வளர்ந்து வந்தான்!..
திங்கள், 1 ஏப்ரல், 2019
KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 40..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.40. த்ருணாவர்த்தன் வதம்!.
கோகுலத்தில் நந்த பாலன் ஆனந்தமாக தன் கரங்களையும் கால்களையும் உதைத்து விளையாடி, தன் அழகிய வதனத்தின் காந்தியால், பெற்றோரையும் மற்றோரையும் மகிழ்வித்து வந்தான்!.. ஆனாலும் அனைவரது மனங்களிலும் ஏதோ இனம் புரியாத பயம் குடி கொண்டிருந்தது. நந்தகுமாரனோ எல்லாம் அறிந்திருந்தும் ஏதும் அறியாத குழந்தையாக விளையாடி மகிழ்ந்திருந்தான்.
திங்கள், 21 ஜனவரி, 2019
KANNANAI NINAI MANAME...BAGAM IRANDU..PART 39...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.39. வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்!!.
வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண்டியை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்தாள். வீட்டினுள், ஆடலும் பாடலுமாக, சத்தமாக இருக்கும் சூழல், குழந்தையின் நிம்மதியான நித்திரையைக் கெடுக்கக் கூடுமென்று, வீட்டுக்கு வெளியே, வண்டியினடியில் குழந்தையைப் படுக்க வைத்து விட்டு, குழந்தைக்குக் காவலாக சில சிறுவர்களையும் வண்டியருகில் அமர வைத்தாள்!..
KANNANAI NINAI MANAME... BAGAM IRANDU.. PART 38...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.38. கோவிந்தம் பரமானந்தம்!
எம்பெருமானை நினைத்து, அவனையே புகழ்ந்து போற்றுவது அவனிடத்தில் மாறாத பக்தி கொண்ட அடியார்களுக்கு மட்டில்லா ஆனந்தத்தைத் தரும் போது, அந்த பகவானுடனேயே இருக்கும் பெரும் பேறு தரும் ஆனந்தத்தை எவ்விதம் சொல்வது?.. பேரானந்தம் அதுவே அல்லவா!!!... அத்தகையதொரு பேரானந்தத்தை, தம் தவப் பயனால் எய்திய கோப கோபியரின் பாக்கியத்தை எப்படித் துதிப்பது?!..
செவ்வாய், 8 ஜனவரி, 2019
KANNANAI NINAI MANAME... BAGAM IRANDU... PART...37..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.37. பெருவாழ்வு எய்தினாள்!!.
இடியோசையை ஒத்த ஒரு பெரும் கதறல் பூதனையிடமிருந்து வெளிப்பட்டது!!. பயங்கரமான தன் சுய உருவை அடைந்து, இரு கரங்களையும் விரித்துக் கொண்டு, மல்லாந்து நிலத்தில் வீழ்ந்தாள் பூதனை!!..
ஞாயிறு, 6 ஜனவரி, 2019
KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU.. PART 36...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.36 பூதனை !!.
மனதில் தோன்றும் எண்ணங்கள், விருப்பங்கள் குறித்துக் கவனமுடன் இருக்க வேண்டுமெனக் கூறாத பெரியோர்களோ, அறநூல்களோ இல்லை!!.. ஆயினும் மனிதன் அவ்விதம் நடக்கிறானா??!!.. அதுவும், மண்ணில் பிறவிகள் தொடரும் போது, ஒரு பிறவியில் மனதில் தோன்றும் விருப்பங்கள், அவற்றின் வலிமையால், தொடரும் பிறவிகளில் இறையருளால் நிறைவேறுகின்றன. அவை நல்லவையாக இருந்தால் எல்லோருக்கும் நலம்!!..இல்லாமல் போனாலோ....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)