![Image result for lord baby krishna with sakadasura](https://i.stack.imgur.com/18kht.gif)
வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண்டியை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்தாள். வீட்டினுள், ஆடலும் பாடலுமாக, சத்தமாக இருக்கும் சூழல், குழந்தையின் நிம்மதியான நித்திரையைக் கெடுக்கக் கூடுமென்று, வீட்டுக்கு வெளியே, வண்டியினடியில் குழந்தையைப் படுக்க வைத்து விட்டு, குழந்தைக்குக் காவலாக சில சிறுவர்களையும் வண்டியருகில் அமர வைத்தாள்!..