(சென்ற பதிவின் தொடர்ச்சி...).
நானாதி³வ்யவதூ⁴ஜனைரபி⁴வ்ருʼதா வித்³யுல்லதாதுல்யயா
விஸ்²வோன்மாத³னஹ்ருʼத்³யகா³த்ரலதயா வித்³யோதிதாஸா²ந்தரா|
த்வத்பாதா³ம்பு³ஜஸௌரபை⁴ககுதுகால்லக்ஷ்மீ: ஸ்வயம்ʼ லக்ஷ்யதே
யஸ்மின் விஸ்மயனீயதி³வ்யவிப⁴வம்ʼ தத்தே பத³ம்ʼ தே³ஹி மே ||
("ஸ்ரீ அப்பனே!, பல தேவமாதர்களால் சூழப்பட்டும், எல்லா உலகங்களையும் மயக்க வல்ல, மின்னல் கொடி போன்ற திவ்ய திருமேனியால் திசையனைத்தையும் பிரகாசிக்கச் செய்து கொண்டும், உமது திருவடித் தாமரைகளின் வாசனையை முகர்வதொன்றிலேயே விருப்பத்துடனும், எந்த உலகத்தில் ஸ்ரீலக்ஷ்மி தேவியானவள் விளங்குகின்றாளோ, அந்த வைகுண்ட பதவியை எனக்கும் தந்தருள வேண்டுகிறேன்!!!....").