நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 5 அக்டோபர், 2015

KANNANAI NINAI MANAME.....PART 43....கண்ணனை நினை மனமே!...பகுதி 43... வெவ்வேறு பூகண்டங்களின் ஆராதனை!..(தொடர்ச்சி...).


இளாவ்ருதத்திற்கு மேற்கிலிருப்பது, கேதுமாலம்.இங்கு தம் லீலைகளாலும், புன்முறுவலாலும் சோபிக்கிற அங்கங்களை உடையவரும், ஸ்ரீலக்ஷ்மியாலும், பிரஜாபதி புத்திரர்களாலும் சேவிக்கப்படுகிறவரும், ஸ்ரீலக்ஷ்மியின் மகிழ்வுக்காக மன்மதரூபம் கொண்டவருமான பகவானை தியானிக்கிறார் பட்டத்திரி..

KANNANAI NINAI MANAME... PART 42....கண்ணனை நினை மனமே!...பகுதி 42... வெவ்வேறு பூகண்டங்களின் ஆராதனை!..




இந்தப் பகுதி, (அக்காலத்தில் வழங்கிய‌ )  பூகண்டத்தின் பிரிவினைகளைப் பற்றிச் சொல்கிறது. இது கொஞ்சம் ஆராய்ச்சிக்குரிய பகுதி என்றே சொல்லலாம்!.. பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிரிவினைகளையே பட்டத்திரியும் சொல்லியிருக்கிறார்.  பூகண்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும், எம்பெருமான் ஒவ்வொரு ஸ்வரூபத்தில் விளங்குவதையும், குறிப்பிட்ட பக்தர்களால் ஆராதிக்கப்படுவதையும் சொல்கிறார்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

​KANNANAI NINAI MANAME.. PART 41...கண்ணனை நினை மனமே.. பகுதி 41....ரிஷப தேவர் சரித்திரம்..(தொடர்ச்சி).


ரிஷபதேவரின் நூறு புதல்வர்களுள், பரதன் அரசுரிமை பெற, மற்ற புதல்வர்களுள் ஒன்பது பேர் யோகீச்வரர்கள் ஆனார்கள். ஒன்பது பேர், இப்பூமண்டலத்தின் ஒன்பது கண்டங்களை ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள்..மற்ற எண்பத்தோரு புதல்வர்களும் தவத்தில் சிறந்தவர்களாகி, மானிடர்களில் மிக உயர்ந்த நிலையை தங்கள் தபோ பலத்தால் அடைந்தார்கள். 

KANNANAI NINAI MANAME...PART 40...கண்ணனை நினை மனமே.. பகுதி 40....ரிஷப தேவர் சரித்திரம்..



உத்தானபாதனுடைய வம்ச சரித்திரம், பிரசேதஸர்கள்,   முக்தியடைந்ததோடு   நிறைவடைந்தது.. 

பட்டத்திரி, பிரியவிரதனுடைய வம்சத்தின் கதையை அடுத்துக் கூற துவங்குகிறார். பகவான், பிரியவிரதனுடைய பேரனாகிய நாபி என்னும் அரசனிடம், புத்திரனாக அவதரித்த சரித்திரத்தை இந்த தசகத்தில் நாம் காணலாம்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

KANNANAI NINAI MANAME....PART 39....கண்ணனை நினை மனமே.. பகுதி 39. த‌க்ஷன் புனர்ஜென்மம் (தொடர்ச்சி....).

உத்தம பக்தர்களான பிரசேதஸர்கள், தங்கள் முன் தோன்றியருளிய பகவானிடம் எந்த வரமும் யாசிக்கவில்லை.. பிறவியின் நோக்கம் கண் முன்னே பிரகாசிக்கும் போது வேறென்ன வேண்டும்!!!...