நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

HAPPY TAMIL NEW YEAR(14/4/2013).....இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 'ஸ்ரீவிஜய' வருடம் ந‌ம் வாழ்வில்  வெற்றிகள் பல அள்ளி வழங்குவதாக அமையட்டும்.
புத்தாண்டில் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் அருள் பொன் மழை போல் பொழிய வேண்டி, ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தின் காணொளியைத் தந்திருக்கிறேன். திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தெய்வீகக் குரலில், கனகதாரா ஸ்தோத்திரனை கேட்கலாம். இதை வலையேற்றிய அன்பருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

சித்திரை முதல் நாளின் மேன்மைகளையும், அன்று செய்ய வேண்டியவை பற்றிய குறிப்புகளையும், என் 'நலம் தரும் நந்தன ஆண்டு' பதிவில் காணலாம்.

இந்த விஜய வருடத்திற்கு அதிபதி, ஸ்ரீகுரு பகவான். இவ்வருடத்தின் மந்திரி ஸ்ரீசூரிய பகவான் ஆவார்.

விஜய வருடத்திய பலன் வெண்பா,

மண்ணில் விசய வருட மழை மிகுதி
எண்ணு சிறு தானியங்களெங்குமே-நண்ணும்
பயம் பெருகி நொந்து பரிவாரமெல்லாம்
நயன்களின்றி வாடுமென நட்டு

'விஜய வருஷத்தில் நல்ல மழை பெய்யும். சிறு தான்யங்கள் நல்ல விளைச்சல் காணும். எங்கும் பயத்தோடு கூடிய சூழலே நிலவும். அதனால் வேதனை ஏற்படும். மக்களும் கால்நடைகளும் வாடும் சூழல் ஏற்படும்.'
எத்தகைய சூழலிலும் இறைவழிபாடால் நலம் காணலாம். ஸ்ரீகுரு பகவானைத் தொழுது வர, எந்தச் சூழலிலும் நன்மையே நடந்து மேன்மை அடையலாம்.

ஸ்ரீவிஜய வருடம், விஜயம் செய்யும் இந்நன்னாளில், அனைவரும், இறையருளால் எல்லா வளங்களும் நலங்களும் பெற்றுப் பெரு வாழ்வு வாழப் பிரார்த்திக்கிறேன்.

வெற்றி பெறுவோம்!!!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

4 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..