மாயையானவள், தேவகியின் கரம் சேர்ந்தாள்!.. விலங்குகள் தாமாகப் பூட்டிக் கொண்டன. சிறையின் கதவுகள் அடை பட்டன. பகவானின் தங்கையாகப் போற்றப்படும் யோக மாயை, பெருங்குரலெடுத்து அழுதாள்!. அந்த அழுகுரலைக் கேட்ட சிறைக் காவலர்கள், ஓடிச் சென்று கம்சனிடம், தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்த செய்தியைச் சொன்னார்கள்!.. தலைவிரி கோலமாக சிறைச்சாலை நோக்கி ஓடி வந்த கம்சன், தன் தங்கையின் கரங்களில் ஒரு பெண் குழந்தை இருக்கக் கண்டு கலங்கினான்!!. 'இது கபடசாலியான மதுசூதனனின் மாயையே!' என்று தீர்மானித்த அவன், தேவகியின் கரங்களிலிருந்த, பிறப்பற்றவளும் பகவானின் தங்கையுமான அந்தக் குழந்தையை, குளத்திலிருக்கும் தாமரைக் கொடியை ஒரு யானை பிடுங்குவது போல் பிடுங்கி, பாறையில் ஓங்கி அடித்தான்!!..
"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
நட்பாகத் தொடர்பவர்கள்
சனி, 22 செப்டம்பர், 2018
KANNANAI NINAI MANAME... BAGAM IRANDU.. PART 34...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.34 கோகுலம் வந்தான்!..
மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவராகி, தம் நெஞ்சாரத் துதித்துத் தொழுதார்!..'தேவ தேவனே!, துன்பக் கட்டுக்களை நீக்க வல்லானே!, கருணை நிறைந்த தங்களுடைய கடைக்கண் பார்வையால், வருத்தங்களை எல்லாம் போக்கி அருள வேண்டும்!!' என்றெல்லாம் பலவாறாகத் துதித்துத் தொழுதார் வசுதேவர்!..
திங்கள், 3 செப்டம்பர், 2018
KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART..33..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.33 ஸ்ரீ கிருஷ்ணாவதார மஹோத்ஸவம்!!!!....
ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை (விருச்சிக) மாதம் 28ம் நாள், , பெரியோர்களால் நாராயணீய தினமாகக் கொண்டாடப்படுகிறது.. தினம் ஒரு தசகமாக, நாராயணீயம் பாடித் துதித்த ஸ்ரீபட்டத்திரி, கார்த்திகை (விருச்சிக) மாதம் 28ம் நாள், ஸ்ரீமந் நாராயணீயத்தை நிறைவு செய்ய, அன்றே ஸ்ரீ குருவாயூரப்பன் தன் திவ்ய தரிசனத்தை அவருக்கு அளித்தருளினான்!!!!.. பெரியோர்கள் பலரும், கார்த்திகை மாதம் 28ம் நாளை 100வது தினமாகக் கொண்டு, அதற்கு முன்பாக 100 தினங்களை எண்ணி வைத்துக் கொண்டு, தினம் ஒரு தசகமாகப் பாராயணம் செய்து, கார்த்திகை மாதம் 28ம் நாள், 100வது தசகத்தைப் பாராயணம் செய்து நிறைவு செய்வது வழக்கம். மஹான்கள் பலரும் இவ்விதம் செய்து ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் பெற்றமையை அவர்கள் திவ்ய சரிதங்களின் வாயிலாக நாம் அறியலாம். இன்றே பவித்ரமான அந்த நாள்!.. ஸ்ரீ குருவாயூரப்பனையும், பட்டத்திரியையும் போற்றித் துதி செய்து, ஸ்ரீ கிருஷ்ணாவதார மஹோத்சவத்தை நாம் தியானிக்கலாம்!..ஸ்ரீமந் நாராயணீயத்தை, ராகத்துடன் பாடுகையில். ஸ்ரீ கிருஷ்ணாவதார மஹோத்சவத்தை பிலஹரி ராகத்தில் பாடுவது வழக்கம்..குகைக்குள் (பிலத்தில்) இருந்து மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு வரும் சிம்மம் போல், பரமாத்மா, தன் தாயின் திருவயிற்றில் இருந்து இவ்வுலகில் அவதரிக்கும் மஹோத்சவத்தை பிலஹரி ராகத்தில் பாடித் துதிப்பர்!.
KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 32...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.32 தேவகியின் கர்ப்பத்தில் பிரவேசித்தார்!..
தேவகியின் கூந்தலைப் பற்றியிருந்த கம்சனின் கைகள், அதனை விடவேயில்லை!.. வசுதேவர் வெகு நேரம் அவனை சமாதானப்படுத்தியும் அவன் விடவில்லை.!!..பின் வசுதேவர், பிறக்கும் குழந்தைகளை எல்லாம் அவனிடம் கொடுத்து விடுவதாக வாக்களித்த பின், கம்சன் ஒப்புக் கொண்டு, தன் வீட்டுக்குத் திரும்பி விட்டான்!!.. அவ்வாறே, தேவகிக்கு முதல் குழந்தை பிறந்ததும், அதனை எடுத்துக் கொண்டு போய், கம்சனிடம் சமர்ப்பித்த போது, மனதில் தோன்றிய இரக்கத்தால், கம்சன் அதனைக் கொல்லவில்லை!!.. துஷ்ட புத்தியுடையவர்களிடம் கூட ஒவ்வொரு சமயம் கருணையானது காணப்படுகிறதல்லவா?!!.
KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU.. PART .31...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.31 தேவாதி தேவன் திருவடியே சரண்!!.
பூர்ணாவதாரம்' என முக்தர்களும் பக்தர்களும் துதிக்கும், ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கான பூர்வ காரணங்களை முதலில் சொல்லத் துவங்குகிறார் பட்டத்திரி!.. முன்பு நடந்த தேவாசுர யுத்தத்தில், காலநேமி முதலான அசுரர்கள், எம்பெருமானின் திருக்கரங்களால் கொல்லப்பட்டாரெனினும், அவர்களது புண்ணிய, பாப மிகுதிகளின் காரணமாக அவர்களால் உத்தம கதியை அடைய இயலவில்லை.. அதாவது, அவர்களது இருவினைகள் முற்றிலுமாகத் தீராது, எஞ்சி நின்றன. அதன் காரணமாக, அவர்கள் பூமியில் மீண்டும் பிறந்தனர். இதுவும் எம்பெருமானின் திருவுளமே!!..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)