நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 26 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.. SONG # 9....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'.. பாடல் # 9.



திருச்சிற்றம்பலம்.

பாடல்;

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"விளக்கம் பொருந்திய, ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய பெண்களே!.. தென்னை மரங்கள் பரவியுள்ள திருவுத்தரகோசமங்கையில், தங்குதல் பொருந்திய, சோதி வடிவான, ஒப்பற்ற திருவுருவமுடைய இறைவன் வந்தருளி, எங்கள் பிறவியை அறுத்து, எம் போன்றவரையும் ஆட்கொள்ளும் பொருட்டு, திருமேனியின் ஒரு பாகத்தில் பொருந்திய மங்கையும்(உமாதேவியும்) தானுமாய்த் தோன்றி,

வெள்ளி, 25 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.....SONG # 8. ..மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 8.


திருச்சிற்றம்பலம்:

பாடல்:

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலில் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந்திரு வுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை  வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ.

பொருள்:

இந்தப் பாடலில், 'ஞாலம் மிக' என்பதை முதலாவதாகக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும்.. 

'உலகம் உய்யும்படியாக, உயர்ந்த கயிலை மலைச் சிகரத்தினின்று, நிலவுலகில் இறங்கி  வந்து, 'வந்தி' தந்த பிட்டினை, அமுதாக உண்டும், வலைஞனாக, கடலில் கட்டுமரத்தின் மீது ஏறி மீன் பிடித்தும், குதிரைகளின் மீதேறி பரிமேலழகனாக வந்தும் நமையாண்ட இறைவன்,

வியாழன், 24 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG # 7....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 7.



திருச்சிற்றம்பலம்!
பாடல்:

உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"அணிகளை அணிந்த பொன்னை நிகர்த்த தனங்களையுடைய பெண்களே! ..நினைத்தற்கரிய, திருவுத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் நிலையாக, பொலிவுடன் எழுந்தருளியிருக்கும் பெருமையுள்ள வேதியனும், தன் புகழை பலகாலும் சொல்லி,

புதன், 23 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG..# 6....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருப்பொன்னூசல்.. பாடல் # 6.

திருச்சிற்றம்பலம்:

பாடல்:

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"தாமரை மொட்டு போன்ற, அணிமணிகளை அணிந்த தனங்களையுடைய பெண்களே!...உமாதேவியாரை, தன் உடலின் ஒரு பாகமாகக் கொண்டருளியவனும், திருவுத்தரகோசமங்கையில் உள்ள, மகரந்தங்களையுடைய கொன்றை மாலையை அணிந்த சடாமுடியை உடையவனும்,  நாய்க்கு ஒப்பான எம்மை,

செவ்வாய், 22 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL...SONG # 5.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருப்பொன்னூசல்....பாடல் # 5.

திருச்சிற்றம்பலம்!..

பாடல்:

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொருள்:

"அழகிய தனங்களையுடைய பெண்களே!!.. 'இறைவன், ஆணோ, பெண்ணோ, அலியோ..' என்று அறிவதற்காக, அயனும் மாலும் தேடியும் கண்டடைய முடியாத கடவுளாகிய எம்பிரான், தன் தனிப்பெருங்கருணையால், தேவர் கூட்டம் தோற்று அழியாதபடிக்கு