அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..
இறையருளாலும், பெரியோர்களின் ஆசியாலும், நான் எழுதிய 'மாணிக்கவாசகப் பெருமான் அருளிய பிடித்த பத்து-- பொருளுரை', மின்னூல் வடிவம் பெற்று விட்டது. அது குறித்த தகவல்களை கீழே கொடுத்திருக்கிறேன்.. அன்பர்கள் மின்னூலினை தரவிறக்கி, படிக்க வேண்டுமாய், மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..
இறையருளாலும், பெரியோர்களின் ஆசியாலும், நான் எழுதிய 'மாணிக்கவாசகப் பெருமான் அருளிய பிடித்த பத்து-- பொருளுரை', மின்னூல் வடிவம் பெற்று விட்டது. அது குறித்த தகவல்களை கீழே கொடுத்திருக்கிறேன்.. அன்பர்கள் மின்னூலினை தரவிறக்கி, படிக்க வேண்டுமாய், மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ‘பிடித்த பத்து’
பொருளுரை: பார்வதி இராமச்சந்திரன்
மாணிக்கவாசகப் பெருமான், ‘பிடித்த பத்து’ பதிகங்களை திருத்தோணிபுரத்தில்(சீர்காழி) அருளினார்..இறைவனைத் தாம் விடாது பற்றிப் பிடித்த பான்மையைக் கூறும் பதிகங்களாதலால் இவை ‘பிடித்த பத்து’ எனப் பெயர் பெற்றன. இறைவனோடு தாம் முக்தியில் கலந்த அனுபவத்தைக் கூறும் பதிகங்களாதலால் ‘முத்திக் கலப்புரைத்தல்’ எனப்பட்டது…
இறையருளால், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ‘பிடித்த பத்து’ பதிகங்களுக்கு, நான் புரிந்து கொண்ட வரையில் உரை எழுதியிருக்கிறேன்!…இதற்கான என் தகுதி பற்றி நான் அறியேன்!..ஆயினும் ஈசனருளை முன்னிறுத்தி, இதனைச் செய்திருக்கிறேன்..
இது என் முதல் மின்னூல்.. இந்த நூலை, திருப்பரங்குன்றத்தில் கோயில் கொண்டருளும், அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனுறை ஸ்ரீ சத்தியகிரீஸ்வர சுவாமி திருவடிகளிலும், அருள்மிகு தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருவடிகளிலும், பக்தியுடன் சமர்ப்பிக்கிறேன்… இந்த நூலைப் படிப்போர் அனைவருக்கும், இறைவன் வேண்டுவன வழங்கி அருளப் பிரார்த்திக்கிறேன்!!..
இந்த நூலில் பிழை திருத்தங்கள் செய்து கொடுத்ததோடு, ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தந்து ஊக்கிய திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்..
இந்த நூலை மின்னூலாக்கம் செய்து உதவிய திரு. ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியும் வணக்கமும்.
அன்பர்கள் நூலினைப் படித்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.. உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!!!!!….
– பார்வதி இராமச்சந்திரன்
அட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com
மின்னூலாக்கம் – அருண் பிரகாஷ் – arunprakash.pts@gmail.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ‘பிடித்த பத்து’ Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பதிவிறக்க*
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
பதிவிறக்கம் செய்து விட்டேன்...
பதிலளிநீக்குமிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...
தங்கள் வாழ்த்துக்களுக்கும் நல்லாதரவுக்கும் மனமார்ந்த நன்றி டிடி சார்!
நீக்குஎமது எண்ணங்களுக்கு செவிமடுத்து
பதிலளிநீக்குஎடுத்த பணியை வெற்றியாக்கிய
உமது பணிகளுக்கு பாராட்டுக்கள்
உள்ளம் நெகிழ்ந்து வாழ்த்துகிறோம்
இந்த மின்புத்தகத்தை
இணைய லைப்ரரியில் சேர்த்துவிடவும்
விரும்பினால் இதற்கு
விலையும் வைக்கலாம்
வாழ்த்துக்கள் இனி
வரும் தொடர்ந்து நல்ல புத்தகங்கள்
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!..இணைய லைப்ரரியில் சேர்க்கிறேன்!...இறைவன் திருநாமம் உளமாரச் சொல்லும் நிலையான பக்தி எனக்கு வாய்க்க வேண்டுகிறேன்!.. ஆகவே விலை வைக்கும் விருப்பமில்லை!..தொடர்ந்த தங்கள் நல்லாதரவுக்கும் என் நன்றி!
நீக்குதாமதத்திற்கு மன்னிக்கவும். சகோதரியின் முதல் மின்னூல் வெளியீடு அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள். மின்னூல் கிட்டத்தட்ட 500 டவுன்லோட் ஆகியுள்ளது. இந்த முதல் முயற்சியின் வெற்றி நிச்சயம் தங்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் அளித்து, இது போல் அடுத்தடுத்து நிறைய மின்னூல்கள் வெளியிட்டு வெற்றி பெற என் வாழ்த்துக்களும், பிரார்த்தனையும்.
பதிலளிநீக்கு