'முன்பொரு சமயம், ஹயக்ரீவன் என்ற அசுரனால், பிரம்மாவிடமிருந்து வேதங்கள் அபகரிக்கப்பட்ட போது, பகவான் மீன் வடிவில் தோன்ற விரும்பினார்!' என்று பகவானின் மச்சாவதாரத்தைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறார் பட்டத்திரி!!..
"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
நட்பாகத் தொடர்பவர்கள்
புதன், 9 ஆகஸ்ட், 2017
KANNANAI NINAI MANAME..BAGAM 2. PART 17..கண்ணனை நினை மனமே.. பகுதி 17. உத்தம கதியை அடைந்தான் மஹாபலி!...(வாமனாவதாரம்!). !!.
மஹாபலியின் சிரத்தில் பகவான் தன் திருவடியை வைத்தருளிய தருணத்தில், அவனது பாட்டனாரான பிரகலாதன் அவ்விடத்தில் நேரில் தோன்றினார். பகவானை, பலவாறு போற்றித் துதி செய்தார்!!..'புத்தியை மயக்கும் செல்வத்தை இவனிடமிருந்து பிரித்தது, இவனுக்குச் செய்த மிகப் பெரிய அனுக்கிரகம்' என்று பகவானைப் போற்றினார். பின், தன் பேரனது பாக்கியத்தை எண்ணிப் பூரித்தார்!. . 'இந்த அருளை, பிரம்மா, ருத்ரன், ஸ்ரீ லக்ஷ்மி தேவி முதலியோரும் அடையவில்லை' என்று பிரகலாதன் தன் துதியில் கூறியதை, ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)