நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 1 ஜூலை, 2012

கவிச்சோலை

உயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை',யில் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு.தனுசு அவர்களின் புதுக்கவிதையொன்றை தங்கள் பார்வைக்குத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். "தான் சொல்வதே சரி எனும் சிறு பிள்ளைத்தனமான கொள்கையோடு சிலர் இருக்கிறார்கள்.அதனை குறிப்பிட்டு எழுதியுள்ள ஒரு சின்ன கவிதை." என கவிஞர் இக்கவிதை பற்றிய சிறு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.


சிறு பிள்ளைத்தனம்

நான்
சாதிக்கப் பிறந்தவன்!
என்ன சாதனையா
சொல்கிறேன்...

அழகு
அமைதி
அன்பு
ஆராதனை-யாவும் பிடிக்காது
அவைகளை அழித்து விடுவேன்.

எனக்கு
எந்த விளையாட்டும் தெரியாது
ஆனால்
என்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்
இல்லையெனில் ஆட்டத்தை
கலைத்து விடுவேன்.

எனக்கு பாட தெரியாது
ஆனால்
என் பாட்டை ரசிக்கவேண்டும்
இல்லையெனில்
கழுதையை கத்த விடுவேன்.

எனக்கு பேசத்தெரியாது
ஆனால்
என் பேச்சை
சொற்பொழிவு என பாராட்டவேண்டும்.

நான்தான்
எங்கும் பிரதானம்
வேடந்தாங்கல் போனாலும்
வேட்டையே ஆடுவேன்!
வேதங்கள் ஓதும் இடமென்றாலும்
பாதஅணி விலக்க மாட்டேன்!

படித்துறையும் படிப்புதுறையும்
இரண்டும் ஒன்றுதான்!
பத்தும் எனக்கு தெரியும்-நான்
ஊரில் உலாவிடும் சிங்கம்!

தற் புகழ்ச்சியாம்
எனக்காம்!
என்னை நீங்கள்
தெரிந்துகொள்ள சொல்வதெல்லாம்
எப்படி
தற் புகழ்ச்சியாகும்?

தலைகன‌ம் கூடாதாம்
சொல்கிறார்கள்.
எனக்கு
இலக்கணமே தெரியாதே!

நான்...
தான் எனும்
கர்வம் உள்ள
சாதிக்குப் பிறந்தவன்
சாதிக்க மாட்டேனா!

அதனால்தான் சொல்கிறேன்
நான்
சாதிக்கப்பிறந்தவன்!

-தனுசு-






வெற்றி பெறுவோம்!!!!

2 கருத்துகள்:

  1. அருமையான வரிகள் ஆழ்ந்தக் கருத்துக்கள்..
    தற்புகழ்ச்சியினை தரம் பிரித்தது அருமை...

    கவிதை நன்று பகிர்வுக்கும் பதிவிற்கும் நந்தர்கள் பல!!!

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..