
நம் பாரத தேசத்தில், நம் கலாசாரத்தையும் வரலாற்றுச் சிறப்புகளையும் இவ்வுலகுக்கு எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடியாகத் திகழ்பவை கோயில்கள். ஆண்டவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களின் சிறப்புகள் சொல்லில் அடங்குவதில்லை.
இறைவன் தூணிலும் துரும்பிலும் இருப்பவராயினும், ஆலயம் என்னும் உயரிய கட்டுமானத்தில் இறை சக்தியை பூரணமாக எழுந்தருளச் செய்து வழிபடுவதற்கு பல அருமையான காரணங்கள் இருக்கின்றன.
கோயில்களின் கலசங்களை ஸ்தாபனம் செய்யும் பொழுது, அவற்றின் அடியில், நவதானியங்கள், நவரத்தினங்கள் முதலியவற்றை வைத்து,அவற்றின் மேல் கலசஸ்தாபனம் செய்வார்கள். இந்தக் கலசங்கள், இடி விழுந்தால் அவற்றின் பாதிப்பை ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையவை. அக்காலத்தில், கோயில் கோபுரத்திற்கு மேல் வீடுகளின் உயரம் இருக்கக் கூடாதென்று கட்டுப்பாடுகள் உண்டு.
அது போல், மூலஸ்தானத்தின் மேல் இருக்கும் விமானமும் பிரத்தியேகமான அமைப்பை உடையது. பிரபஞ்சத்தின் அதி உன்னதமான தெய்வீக சக்தியை ஈர்த்து நமக்கு அளித்து நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் மகிமை பொருந்தியவை ஆலய விமானங்கள்.விமானங்களுள், தூங்கானை மாடம்(கஜபிருஷ்ட விமானம்), இந்திர விமானம் போன்ற பல அமைப்புகள் உண்டு.
அது போல், ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தங்களின் வடிவங்களுக்கும் ஆழ்ந்த பொருளுண்டு. சிற்ப சாஸ்திரம், மிகவும் நுணுக்கமான முறையில் ஒவ்வொரு இறை மூர்த்தங்களுக்கும் பிரத்யேகமான ஆசன முறைகளை வடிவமைத்திருக்கிறது. இவற்றில் பல, யோகாசனத்திலும், நாட்டிய சாஸ்திரத்திலும் கையாளப்படுகின்றன.
இந்தப் பதிவில் , ஆலயங்களில் இறை மூர்த்தங்கள் எழுந்தருளியிருக்கும் பொதுவான சில திருவடிவங்களைக் குறித்துக் காணலாம்.
ஸ்தானகம்
ஸ்தானகம்
லலிதாசனம்:
ஒரு காலை மடித்து நேராக ஊன்றி, மறுகாலை தொங்கவிட்டு, திருமேனி ஒரு புறமாக நளினமாக சாய்ந்து இருக்கும் திருக்கோலமும் லலிதாசன வடிவே. புத்தமத வழிபாட்டுக் கடவுள்களில் ஒன்றான, வசு தாராவின் திருவடிவம் இதற்கு உதாரணம்.
சுகாசனம்
இறைவனது திருமேனியில் எந்தவித வளைவுகளும் இல்லாமல், திருமேனி நேராக, எந்தப் புறமும் சாயாமலும் இருக்குமாறும், ஒரு காலை மடித்து, மறு காலை சாதாரணமாக தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் திருக்கோலத்திலும் இருக்கும் நிலையே சுகாசனம். இது பொதுவாக, சில சிவ,விஷ்ணு திருமேனிகளில் காணப்படுகிறது. சிவனாரின் திருவடிவங்களில் 'சுகாசன மூர்த்தி' என்ற திருவடிவம் மிகச் சிறப்புடையது. உமா தேவி, சிவாகமங்களது தத்துவங்களை உபதேசிக்குமாறு சிவனாரிடம் வேண்டிக்கொள்ள, அதற்கிணங்கி, சிவபெருமான் சுகாசனத்தில் அமர்ந்து உபதேசித்த திருக்கோலமே சுகாசன மூர்த்தி.சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் மூர்த்தங்களை வழிபடுவோர், வாழ்வின் எல்லா சுகங்களையும் அடைந்து இன்புறுவர்.உத்குடிகாசனம்:
யோகாசனம்:
பத்மாசனம்:

அநேகமாக, அனைவரும் அறிந்த ஆசனம் இது. தலை உச்சியில் அமைந்துள்ள சஹஸ்ர தள பத்மத்தை குறிப்பதான ஆசனம் இது. இதை கமலாசனம் என்றும் அழைப்பதுண்டு. இறைத் திருமேனி, தன் இரு கால்களையும் இரண்டு தொடைகளின் மீதும் குறுக்காக மடித்தபடி அமர்ந்திருக்கும் திருக்கோலமே இது.காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன், கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை அம்மன் ஆகிய இருவரும் பத்மாசனத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றார்கள். இறை மூர்த்தம் பிரபஞ்ச சக்தியின் ஒருங்கிணைந்த வடிவம் என்பதை உணர்த்தும் திருக்கோலம் இது.
வீராசனம்:

இறை மூர்த்தங்கள் திருக்கரங்களில் இருக்கும் முத்திரைகளுக்கும் விசேஷமான அர்த்தங்கள் உண்டு. அவற்றைக் குறித்து பின்னொரு பதிவில் காணலாம்.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
வெற்றி பெறுவோம்!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
ஸ்தானகம், லலிதாசனம், சுகாசனம், உத்குடிகாசனம், யோகாசனம், பத்மாசனம், என் ஒவ்வொன்றையும் படத்துடன் கூடிய விளக்கங்கள் மிகவும் சிறப்பு... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மனமார்ந்த நன்றி டிடிசார்.
நீக்குதொடருங்கள்
பதிலளிநீக்குதொடருகிறோம்
தொடர்ந்து வரும் தங்கள் அன்பான ஆதரவுக்கு என் பணிவான நன்றிகள் ஐயா!!!
நீக்குgood compilation. congrats
பதிலளிநீக்குThanks, thanks, thanks a lot sir..
நீக்கு