நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 19 ஆகஸ்ட், 2015

கொஞ்சம் அல்ல.. நிறையவே வருத்தம்!...

உண்மையில் இந்தப் பதிவினை எழுத நிறையவே வருத்தமாக இருக்கிறது... ஆயினும் சொல்லித் தான் ஆக வேண்டிய நிலை.. 'ஆலோசனை'யில் வெளிவந்த 'சுமங்கலிப் பிரார்த்தனை' பதிவுக‌ள், வரிக்கு வரி, கீழ்க்கண்ட தளத்தில் காபி செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.. 'ஆலோசனை' பதிவுகளின் நிறைவில் இடம் பெறும், 'வெற்றி பெறுவோம்!' முதற்கொண்டு காபி செய்திருக்கிறார்கள். 



'ஆலோசனையில்'  இரண்டு  பகுதிகளாக வெளிவந்ததை, 



ஒரே பகுதியாக வெளியிட்டிருக்கிறார்கள்.  வெளியிடுவோர், வெளியிடும் முன்பாக அனுமதி பெற்றுச் செய்திருக்க வேண்டும். அல்லது.. 'நன்றி' என்று சொல்லி, தளத்தின் முகவரி கொடுத்திருக்கலாம். இரண்டும் செய்யாதது மட்டுமல்ல..நான் அங்கு குறிப்பிட்டிருந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிக் கேட்டும் பதிலேதும் சொல்லாததாலேயே இங்கு குறிப்பிடும் சங்கடம் நேர்ந்தது.. இது எனக்கு மிக மிக வருத்தமளிக்கிறது.

இதைக் குறிப்பிடுவதன் நோக்கம், இம்மாதிரியான செயல்களைத் தடுப்பதற்கே. இம்மாதிரியான செயல்கள் நிறுத்தப்படுமாயின் மகிழ்வடைவேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..