அன்பர்களுக்கு வணக்கம்.
ஐப்பசி பௌர்ணமி நன்னாள் இன்று. விண்ணும் மண்ணும் படைத்து, நமக்கெல்லாம் உணவிட்டு அருளும் சிற்றம்பலத்தானுக்கு, சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.
ஐப்பசி பௌர்ணமி தினத்தில், வட இந்தியாவில் மிக முக்கியமாக அனுசரிக்கப்படும் ஒரு பூஜையைப் பற்றி இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.
'கஜகரி லக்ஷ்மீ பூஜை' என்று வழங்கப்படும் இது ஐப்பசி பௌர்ணமி தினத்தில் கடைபிடிக்கப்படுகின்றது.
நமக்கு வெள்ளிக்கிழமை லக்ஷ்மீ பூஜைக்கு உகந்த தினம் என்பது போல், வட இந்தியர்களுக்கு, வியாழக்கிழமை லக்ஷ்மீ பூஜைக்கு உகந்த தினம். வியாழக்கிழமையை 'லக்ஷ்மீ வாரம்' என்றே குறிப்பிடுகின்றார்கள். இந்தப் பூஜையை ஒவ்வொரு வியாழக் கிழமையும் செய்தால் ஸ்ரீலக்ஷ்மீ கடாக்ஷம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால், அவ்வாறு தொடர்ந்து செய்வது சில நேரங்களில் இயலாது போவதால், வருடத்திற்கொரு முறை, 'சரத் பூர்ணிமா' தினமான இன்று செய்கிறார்கள்.
இந்தியாவில், வங்காளம், ஒரிசா, அஸ்ஸாம் முதலான மாநிலங்களில் பெருவாரியாகச் செய்யப்படும் இந்தப் பூஜை, மேற்குப் பகுதியில் இருக்கும் மாநிலங்கள் சிலவற்றிலும் கடைபிடிக்கப்படுகின்றது.
வங்காளத்தில் இது, 'கோஜாகரி லக்ஷ்மி விரதம்' என்று அழைக்கப்படுகின்றது. 'கோ ஜாகர்தி' என்றால் வங்க மொழியில் 'யார் விழித்திருக்கிறார்கள்' என்று பொருள். இந்த விரத தினத்தின் இரவில் யார் விழித்திருக்கிறார்களோ அவர்களுக்கு லக்ஷ்மியின் திருவருள் கிட்டும். சரத் பூர்ணிமா தின இரவில், லக்ஷ்மி தேவி, 'யார் விழித்திருக்கிறார்கள்?' என்று கேட்டுக் கொண்டே ஒவ்வொரு இல்லத்துக்கும் வருவாளாம். விழித்திருப்போருக்கு அருள் மழை பொழிவாளாம். சரத் பூர்ணிமா தினத்தின் விஞ்ஞான ரீதியான காரணத்தைப் பார்க்கும் போது, இரவு விழித்திருக்கச் சொல்லும் காரணம் புரிபடுகின்றது.
வங்காளத்தில் இது, 'கோஜாகரி லக்ஷ்மி விரதம்' என்று அழைக்கப்படுகின்றது. 'கோ ஜாகர்தி' என்றால் வங்க மொழியில் 'யார் விழித்திருக்கிறார்கள்' என்று பொருள். இந்த விரத தினத்தின் இரவில் யார் விழித்திருக்கிறார்களோ அவர்களுக்கு லக்ஷ்மியின் திருவருள் கிட்டும். சரத் பூர்ணிமா தின இரவில், லக்ஷ்மி தேவி, 'யார் விழித்திருக்கிறார்கள்?' என்று கேட்டுக் கொண்டே ஒவ்வொரு இல்லத்துக்கும் வருவாளாம். விழித்திருப்போருக்கு அருள் மழை பொழிவாளாம். சரத் பூர்ணிமா தினத்தின் விஞ்ஞான ரீதியான காரணத்தைப் பார்க்கும் போது, இரவு விழித்திருக்கச் சொல்லும் காரணம் புரிபடுகின்றது.
ஐப்பசி பௌர்ணமியின் முக்கியத்துவம்.
சரத் பூர்ணிமா என்றழைக்கப்படும், ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று, சந்திரன் தன் அமுதகிரணங்களை பூமியில் முழுமையாகப் பொழிவதாக ஐதீகம். இந்தப் பௌர்ணமி தினத்திலேயே, பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளுடன் பிருந்தாவனத்தில் 'ராஸலீலை' புரிந்தார். கோபிகைகளின் மனத்திலிருந்த உயர்ந்த பக்தி நிலையை உலகறியச் செய்த தினமே இன்று.

விஞ்ஞான ரீதியிலான முக்கியத்துவம்:
இன்று சந்திரன், பூமிக்கு மிக அருகில் வருகிறது. ஆகவே, சந்திரன் பேரொளிமயமாகத் தெரிகிறது. மேலும் சந்திரனின் ஒளிக்கிரணங்களுக்கு, நோய்களைக் குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் அதிகரிக்கிறது. ஆகவே, இன்று பெரும்பாலான வட இந்தியர்கள், சந்திரனின் ஒளி விழும் இடத்தில், பாலைக் காய்ச்சி பருகும் சம்பிரதாயத்தை வைத்திருக்கிறார்கள்.
இந்தப் பூஜையின் முக்கியத்துவம்:
பொதுவாக, பௌர்ணமி ஸ்ரீலக்ஷ்மீ தேவியின் பூஜைக்கு உகந்த நாள் என்று கருதப்படுகின்றது. அன்றைய தினம், ஸ்ரீலக்ஷ்மீ தேவி, இல்லங்கள் தோறும் எழுந்தருளி, தன்னைப் பூஜிப்பவர்களுக்கு, எல்லா வளமும் நலமும் தருகின்றாள் என்பது நம்பிக்கை. வங்காளிகள், ஐப்பசி மாதம், ஸ்ரீலக்ஷ்மீ தேவிக்கு மிக உகந்த மாதம் என்று நம்புகிறார்கள். விஜயதசமி தினத்துக்கு அடுத்து வரும் பௌர்ணமி திதியே இந்த பூஜைக்கு உகந்தது. பெரும்பாலும் ஐப்பசி பௌர்ணமியாகவே இது வருவதால் இந்தப் பூஜை ஐப்பசி பௌர்ணமி தினத்தில் கடைபிடிக்கப்படுகின்றது.
செய்யும் முறை;
பூஜைக்காக, களிமண்ணால் செய்யப்பட்டு அலங்கரிக்கபட்ட அன்னையின் திருவுருவங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடைகளில் விதவிதமாக, கலர்கலராக, 'கொலு' போன்று வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பிரதிமைகளைப் பார்ப்பதற்கே கோடிக் கண்கள் வேண்டும். பிரதிமைகளை வாங்கி வந்து இல்லங்களில் பூஜிக்கின்றார்கள். பூஜை செய்யும் முறை, இனத்துக்கு இனம், இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது.
பொதுவான பூஜை முறை:
அனைத்துப் பூஜைகளுக்கும் செய்வதைப் போல, இல்லங்களைச் சுத்தப்படுத்துகின்றார்கள். வீட்டு வாயிலிலும் பூஜை செய்யும் இடத்திலும் , 'அல்பனா'/'அல்போனா/ எனப்படும் ரங்கோலி டிசைன்கள் வரையப்படுகின்றன. பெரும்பாலும் 'ஸ்ரீபாதம்' என்று நாம் வரையும் டிசைன்களை இவை ஒத்திருக்கின்றன.
பூஜை செய்யும் இடத்தில் நிறைய தீபங்கள் ஏற்றுகிறார்கள் . அகல் விளக்கு மிக உகந்ததாகக் கருதப்படுகின்றது.
பெண்கள் வந்ததும், அவர்களை வாசலில் நிற்க வைத்து வரவேற்கிறார்கள். அவர்களுக்கு குங்குமம் இட்டு, வாயால் குலவைச் சத்தம் இட்டு, சங்கு ஊதி லக்ஷ்மீயை உள்ளே அழைக்கிறார்கள். சங்கு, வங்காளிகளுக்கு மங்கலச் சின்னம்.
முதலில் பிள்ளையார் பூஜை. அதன் பின், திவ்ய தம்பதிகளை இணைத்தே பூஜிக்க வேண்டும் என்ற முறை தவறாது ஸ்ரீநாராயணருக்கு பூஜை செய்யப்படுகின்றது. ஸ்ரீநாராயணரின் உலோகப் பிரதிமைகள் அல்லது படத்தில் பூஜிக்கிறார்கள்.
பின்,ஸ்ரீலக்ஷ்மீ தேவியை கலசத்தில் ஆவாஹனம் செய்து, ஷோடசோபசார பூஜைகள் செய்து, ஸ்ரீலக்ஷ்மீ அஷ்டோத்திரம் கூறி அர்ச்சனை செய்கிறார்கள்.
பழங்களை ,விநியோகிப்பதற்கு ஏற்ற வகையில் துண்டங்களாக நிவேதனம் செய்கிறார்கள்.
விரத பூஜைக் கதையைப் படித்து, மீண்டும் அன்னைக்கு ஆரத்தி செய்து, நமஸ்கரித்து பூஜையை நிறைவு செய்கிறார்கள்.
விரதம் இருப்பவர் அதன் பின்னே உணவு கொள்கிறார். விரதம் இருப்பவரும், அவரது குடும்பத்தினரும், அன்றைய தினம் இரவு முழுவதும் விழித்திருந்து, அம்பிகையின் துதிகளையும், லக்ஷ்மி புராணம் முதலியவற்றையும் பாராயணம் செய்கிறார்கள். இது மிக முக்கியமாகக் கடைபிடிக்கப்படுகின்றது.
விரதம் இருப்பவர் அதன் பின்னே உணவு கொள்கிறார். விரதம் இருப்பவரும், அவரது குடும்பத்தினரும், அன்றைய தினம் இரவு முழுவதும் விழித்திருந்து, அம்பிகையின் துதிகளையும், லக்ஷ்மி புராணம் முதலியவற்றையும் பாராயணம் செய்கிறார்கள். இது மிக முக்கியமாகக் கடைபிடிக்கப்படுகின்றது.
விரத பூஜைக் கதை:
வட இந்தியாவில் ஒரு முறை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பெண்கள் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளானார்கள். அப்போது ஸ்ரீநாரத மஹரிஷி, ஸ்ரீ லக்ஷ்மீ தேவியைத் துதித்து, 'இந்த நிலைக்கான காரணம் என்ன?, இது எப்போது மாறும்?' என்று வேண்டினார்.
அதற்கு லக்ஷ்மீ தேவி, 'அகம்பாவமே மனிதர்களை அழிக்கின்றது. மக்கள், செல்வச் செருக்கினால் அகம்பாவம் கொண்டு யாரையும் மதிக்காது நடந்தார்கள். அவர்களுடைய கெட்ட குணங்களே அவர்களுக்கு கஷ்டங்களைக் கொண்டு வந்தன. பெண்கள், தங்கள் குழந்தைகள், கணவர்கள்,முதியோர்கள் யாவரையும் மதிக்காது நடந்தார்கள். இறை வழிபாட்டை மறந்தார்கள். தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டும், சத்தமாகப் பேசிக் கொண்டும், உரக்க சிரித்தும், பூமி அதிர நடந்தும்,மங்கலச் சின்னங்களை மதியாமலும் வாழ்ந்தார்கள்.
நன்னடத்தையே மக்களின் ஒப்பற்ற செல்வம். அதைக் கைவிட்டதால் கஷ்டங்கள் வந்தன'. என்றுரைத்தாள்.
நாரத மாமுனி, ஸ்ரீலக்ஷ்மீ தேவியிடம், மன்னுயிர்கள் சார்பில் மன்னிப்பை வேண்டினார். லக்ஷ்மீ தேவியும் அவரது வேண்டுதலை ஏற்றாள்.
அவந்தி நகரில், ஒரு பெண், காட்டில் மிகுந்த சிரமத்துடன் அலைந்து கொண்டிருந்தாள். ஆற்று நீர் வற்றி விட்டாலும் ஊற்று நீர் உதவுவது போல, பெண்களில் இன்னும் நற்குணங்களை மறக்காத ஒருத்தி அவள். அவளுக்கு ஏழு மகன்கள். செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்த அவளது செல்வங்கள் அனைத்தும் பறிபோயின. அவள் மகன்கள் அனைவரும் அவளை விட்டுப் பிரிந்து விட்டனர். அவள் மூலம் அன்னை மனித குலத்திற்கே நல்லருள் புரிய திருவுளம் கொண்டாள்.
அவள் முன் வேறு ரூபம் எடுத்துத் தோன்றிய அன்னை, அவளைப் பற்றி விசாரித்தாள். ஆனால் துன்பத்தால் துவண்டு நின்ற அந்தப் பெண்ணோ தன்னைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. பின், அன்னை தன் சுய உருவில் தோன்றி, அந்தப் பெண்ணைத் தேற்றி, 'கஜகரீ லக்ஷ்மீ' பூஜை விதியையும் அனுசரிக்கும் முறையையும் கூறினாள். இவ்வாறு பூஜித்து, விரதக் கதையைப்ப் படிப்பவர்கள் இல்லத்தில், தான் என்றென்றும் நீங்காது நிலைத்திருப்பதாக வரமும் அளித்து மறைந்தாள்.
அந்தப் பெண்ணும், காட்டிலிருக்கும் பொருட்களை கொண்டு, லக்ஷ்மீ தேவியைப் பூஜிக்க, இழந்த செல்வங்களையும், மக்களையும் மீண்டும் பெற்றாள். அவளே இந்தப் பூஜை முறையை பலருக்கும் உபதேசித்து, நல்வழி காணச் செய்தாள்.
இன்னொரு கதை:
வலித் என்பவன் ஒரு ஏழை. மிகுந்த உழைப்பாளி ஆன அவன், எவ்வளவு உழைத்தும் செல்வம் நிறையாமல் வருந்தினான். அவனது நல்ல குணத்திற்கு சற்றும் பொருந்தாத மனைவி சாந்தினி. செல்வம் இல்லாததால் அவனை மதிக்காததோடு, அவன் எதைச் சொன்னாலும் ஏறுக்கு மாறாகச் செய்வது அவள் வழக்கம்.
வருந்திய வலித், அவளை விட்டு நீங்கி, காட்டுக்குச் சென்றான். அங்கு, மூன்று நாகக் கன்னியர்கள், இந்த விரதத்தை அனுஷ்டிப்பதைப் பார்த்து, அங்கு சென்று, அவர்களுடன் இணைந்து இந்த விரதத்தை அனுஷ்டித்து, லக்ஷ்மீ தேவியின் அருளால் மலையளவு செல்வம் பெற்றுத் திரும்பினான். சாந்தினி மன மகிழ்வு கொண்டு கணவனை அன்புடன் வரவேற்றாள். லக்ஷ்மீ தேவியின் அருளால் நல்ல குணங்கள் அவளுள் குடி கொண்டன. மனம் திருந்திய தன் மனைவியுடன் சுகமாக பல்லாண்டு வாழ்ந்தான் வலித்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெறும் பூஜைகள், விரதங்கள், சம்பிரதாயங்களை பதிவிட்டு, அனைவரும் அறியச் செய்வதே இம்மாதிரியான பதிவுகளின் நோக்கம். ஸ்ரீலக்ஷ்மீ தேவியை இந்த உன்னத தினத்தில் பூஜித்து, வேண்டும் வரங்களைப் பெற்று,
வெற்றி பெறுவோம்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
இந்தப் பதிவிற்காக, வல்லமை மின்னிதழ், எனக்கு வல்லமையாளர் விருது வழங்கியிருக்கிறது. இறைவனின் கருணைக்கும் வல்லமை மின்னிதழுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.. இதன் விவரம் அறிய கீழே சொடுக்கவும்...
http://www.vallamai.com/?p= 39536
இந்தப் பதிவிற்காக, வல்லமை மின்னிதழ், எனக்கு வல்லமையாளர் விருது வழங்கியிருக்கிறது. இறைவனின் கருணைக்கும் வல்லமை மின்னிதழுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.. இதன் விவரம் அறிய கீழே சொடுக்கவும்...
http://www.vallamai.com/?p=
ANNABHISHEKAM GAJALAKSHMI POOJA DETAILS SUPER IYPPASI MATHAM ANNAI ARULMAZHAI POZHIYATTUM
பதிலளிநீக்குTHANKS
ESSAR
THANKS A LOT SIR...
நீக்குதொடர்ந்து இம்மாதிரி வித்தியாசமான தகவல்களைக் கொடுங்கள். புகைப்படங்கள் தேர்வும் அருமை. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.
பதிலளிநீக்குதங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...
நீக்குஅருமையான பதிவிற்கும், 'வல்லமையாளர்' விருதிற்கும், மனமார்ந்த வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குரொம்ப ரொம்ப நன்றி கவிநயா..
நீக்குவல்லமையாளர் விருது பெற்ற
பதிலளிநீக்குவல்லமையே உம்மை வாழ்த்துகிறோம் வணக்கங்களுடன்
அய்ப்பசி பவுர்ணமி
அண்ணாபிஷேகத்தன்று ஒவ்வொராண்டும்
காசி செல்வது எமக்கு பழக்கம்
கங்கை கரையில் அமர்ந்து நிலவினை ரசிப்பது
அரண் நாமம் செபிப்பது என
அந்த ஒரு நாள் போதுமே அடுத்த
ஒராண்டு செயலாற்ற பேட்டரி ரீசார்ஜ் செய்து
ஓடுவதற்கு என மகிழ்வோம்
தாமதமான பின் ஊட்டத்திற்கு காரணம்
நாம் யாத்திரையில் இருந்தமைதான்
வாழ்த்துக்களை மீண்டுமொருமுறை
வழக்கம் தந்து வணங்குகிறோம்
ஐயா!!, சென்ற வருடமே இதைச் சொல்லியிருந்தீர்கள்..ஆகவே..இதுவே காரணமாக இருக்குமென நினைத்திருந்தேன்...இறையருளால் எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பரிசிலும் தங்கள் அன்பும் ஆசியும் இணைந்திருக்கிறது எப்போதும்..இது தொடர வேண்டுமென்பதே எப்போதும் என் பிரார்த்தனை..மனமார்ந்த நன்றி ஐயா!!!...
நீக்கு