
சித்ரகேது, நாரதரால் மந்திர உபதேசம் அருளப் பெற்றான். ஆதிசேஷ ஸ்வரூபனான பகவானை திருப்தி அடையச் செய்ய வல்ல ஸ்தோத்திரத்தையும் பெற்றான். அவற்றின் மூலம், ஒருமுகமான மனதுடன் பகவானை நினைத்துத் தவம் புரிந்தான். அவனது தவம் ஏழு நாட்களில் மிகச் சிறந்த பலனை அளித்தது. வித்யாதரர்களுக்கு அதிபதியாகும் நிலையை அடைந்தான். ஆயினும், குறையாத பக்தியுடன் பகவானை சேவித்து வந்தான்.