நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 31 டிசம்பர், 2014

KANNANAI NINAI MANAME!... PART 11...கண்ணனை நினை மனமே!..பகுதி 11..(அஷ்டாங்க யோகம்.. தொடர்ச்சி).

பட்டத்திரி, தொடர்ந்து சொல்கிறார்!..

"இவ்விதம் உன் அவயவங்களைத் தியானிப்பவர்களுக்கு, உன் பரப்பிரம்ம ஸ்வரூபம், தானே மனதுள் பிரகாசிக்கிறது. அந்த சமாதி நிலையை அடைந்த பின்னர், அதிலிருந்து நழுவ நேர்ந்தால், மறுபடியும் தாரணை முதலியவற்றை நாங்கள் தொடங்குவோம்!.. இந்த தொடர் அப்பியாசத்தால், சுகர், நாரதர் போல், பக்தர்களில் தலைசிறந்தவராவோம்!..".

திங்கள், 15 டிசம்பர், 2014

KANNANAI NINAI MANAME!...PART 10...கண்ணனை நினை மனமே!!!...பகுதி 10...அஷ்டாங்க யோகம்!...


இதுவரை, தம் உள்ளத்தில் நிலையான பக்தியை அருளுமாறு வேண்டிய பட்டத்திரி, யோக மார்க்கத்தின் மூலம், பகவானை அடையும் விதம் பற்றி, இந்த தசகத்தில்  சொல்கிறார்!..

KANNANAI NINAI MANAME..PART 9....கண்ணனை நினை மனமே!.. பகுதி 9..​

நாம் முன்பே பார்த்தது போல்,  பட்டத்திரிக்கு ஏற்பட்ட நோய், அவரது விருப்பத்தாலேயே ஏற்பட்டது...எனினும் அதைத் தீர்க்கும் வழி அறியாதவராக, குருவாயூரப்பனிடம் சரண் புகுந்தார்.. தமது நோயின் காரணமாக, பரம பக்தனின் இலக்கணங்களாகச் சொல்லப்படும் குணங்கள் எதையும் தம்மால் கடைபிடிக்க இயலவில்லை என்று மனவருத்தம் மிகக் கொண்ட அவர், தம்மை பக்தி வழியில் செலுத்துமாறும், அதற்காக, தமக்கு உடல் நலத்தை அருளுமாறும் வேண்டுகிறார் ஸ்ரீஅப்பனிடம்!..

KANNANAI NINAI MANAME...PART 8....கண்ணனை நினை மனமே!..‍பகுதி 8....

பக்தர்கள், பகவானிடத்திலே எப்போதும் ஈடுபட்ட மனதுடையவர்களாக, அவரது லீலைகளைப் பற்றியே சிந்தித்து,  தன்னையொத்த மனப்பாங்குடையவர்களிடம் சத்சங்கம் செய்து கொண்டு சஞ்சரிப்பதையே இயல்பாகக் கொண்டவர்கள்..அவ்விதம் இருக்கும் போது, உலகத்தின் மாயா வேகம் அவர்களைத் தாக்காது.. ஸ்திரமான மனதுடையவர்களாய், உலகியல்களால் பாதிக்கப்படாது, தாமரை இலைத் தண்ணீர் போல், பற்றற்று உலகியலை நடத்துவார்கள்.. பகவானின் நாம ஸ்மரணை அவர்களது இயல்பில் ஒன்றியதாயிருக்கும்..

KANNANAI NINAI MANAME..PART 7.....கண்ணனை நினை மனமே!..பகுதி 7...பக்தன் எவ்வாறு இருக்க வேண்டும்?!..


இந்த தசகத்தில்,  பக்தனின் இலக்கணம், அவன் எவ்வாறிருக்க வேண்டும் என்று பட்டத்திரி கூறுவதைப் பார்க்கலாமா?..

திங்கள், 1 டிசம்பர், 2014

KANNANAI NINAI MANAME.. PART 6....கண்ணனை நினை மனமே!!.. பகுதி 6.. பகவத் ரூப வர்ணனை!..(தொடர்ச்சி..).

குதூகலத்தை அளிக்கும் பரந்தாமனின் திவ்ய ரூபம், பட்டத்திரியை முழுமையாக ஆட்கொண்டதில் வியப்பென்ன?!... இப்போது, பரிபூரணனின் திருவுருவம், பட்டத்திரியின் மனத்திரையில் முழுமையாக உருக்கொண்டு விட்டது. கேசாதிபாதமாக வர்ணித்தவருக்கு, சட்டென்று பொறி தட்டியது!.. ஆ!!.. பிராட்டியின் சிறப்பைச் சொல்ல வேண்டாமோ?!. பெருமானின் கருணை வடிவே  பிராட்டியாய் அவன் திருமார்பில் கொலுவிருக்க, ஸ்ரீ யை சேர்த்தல்லவோ ஸ்ரீநிவாசனை தியானிக்க வேண்டும்?!..

KANNANAI NINAI MANAME..PART 5...கண்ணனை நினை மனமே!!.. பகுதி 5.. பகவத் ரூப வர்ணனை!..


ஸ்ரீமந்நாராயணீயமே பக்திப் பிரவாகம். .நிலையான க்ருஷ்ண பக்தியையே, தியான ஸ்லோகத்தில் பட்டத்திரி பிரார்த்திக்கிறார். பக்தன் , பகவானை, நினைந்து நினைந்துருகி தியானிப்பதிலேயே பேரின்பம் காண்பவன்.. அது போல், அவரது மகிமைகளைப் போற்றுந்தோறும் எல்லையில்லா இன்பம் காண்கிறான். அதற்கு எல்லையிட அவனால் ஆகாது!..

KANNANAI NINAI MANAME!!.. PART 4...கண்ணனை நினை மனமே!.. பகுதி; 4..


குருவாயூரப்பனின் திருமேனியழகை தொடர்ந்து தியானிக்கிறார் பட்டத்திரி!


"நீர் கொண்ட மேகம் போல் கறுத்தும் அழகாகவும்காயாம்பூவைப் போல் மனதிற்கு இனிமையானதாகவும்எல்லையற்ற அழகுடையதாகவும்லக்ஷ்மீ தேவியின் லீலா நிலயமாகவும்தியானிப்பவர்களின் மனதில் அமுதத்தை பெருக்குவதாகவும் உள்ள உமது திருமேனியை இடையறாது தியானிக்கிறேன்.."